சேலம், ஜூன் 20- தலித் மக்களுக்கு உரிமையான நிலங்களை போலி பத்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து நில மோசடி செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீடு இல்லாத தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், 48 ஆவது வார்டு தாதம்பட்டி கிராமத்தில் 14.25 ஏக்கர் நிலம் தோட்டி, ஊழியம், இனாம், அனாதீனம் போன்ற பல்வேறு சர்வே எண்களில் உள்ளது. இந்த நிலங்களை சிலர் சட்டவிரோதமாக போலி பத்திரங் களை உருவாக்கி ஆக்கிரமித்து நில மோசடி செய்து வருகின்றனர். தலித் மக்களின் நிலத்தில் இதர சமூக மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, சார்பதிவாளர் அலுவலக பதிவு குறிப்புகளிலும், வருவாய்த் துறை அலுவலகம் சார்ந்த பல்வேறு கிராம கணக்குப் பதிவேடுகளிலும், தாதம்பட்டி பகுதியில் உள்ள தோட்டி, ஊழியம், இனம், அனாதீனம் நிலங் கள் குறித்த தல தணிக்கை, புல தணிக்கை கள ஆய்வு மூலம் விபரங் களை பெற வேண்டும். இதன் தொடர்பு டைய, கிராமப்புற எண்கள் குறித்த சார் பதிவகம் பதிவேட்டு குறிப்புகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தாதம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட தலித் மக்களுக்கு சார்புடைய நிலங் களை மீட்டெடுத்து, வீடற்ற உண்மை பயனாளிகளுக்கு வழங்கிடும் வகை யில் விரிவான விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும். இதுவரை நடை பெற்ற முறைகேடுகளை களைந்து நட வடிக்கை எடுத்திட வேண்டும் என வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
மேலும், , 44 ஆவது டிவிசன் அடுக் குமாடி குடியிருப்புகள் தலித் மக்க ளுக்கு வழங்கப்பட்டது போல், சேலம் மாநகரம் 44 ஆவது டிவிஷன் காந்தி நகர், நேரு நகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் காலி யாக உள்ள 300க்கும் மேற்பட்ட குடியி ருப்புகளை அருகிலுள்ள கஸ்தூரி பாய் தெருவில் வசிக்கும் தலித் மக்க ளுக்கு வழங்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். இது சம்மந்தமாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாநகர குழு உறுப்பினர் மா. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.வைரமணி, மாநகர குழு உறுப்பி னர்கள் ஜி.சுல்தான், பச்சமுத்து, வா. பெரியசாமி எம்.சி., சேகர், சாவித்திரி, சேட்டு உள்ளிட்ட தாதம்பட்டி கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.