districts

img

இந்தியைத் திணிப்பை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், ஏப்.19- இந்தியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்யக்கோரியும் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் இடைக்கமிட்டி உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் தலைமை வகித் தார். தாலுகா செயலாளர் என்.கனக ராஜ் கண்டன உரையாற்றினர்.  இதில்,  இந்தி தான் இந்தியாவின் மொழி என் றும், மாநிலங்களுக்கு இடையில் இனி  கடிதப் போக்குவரத்து அனைத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டு மென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சிற்கு கடும் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல்,  மத்திய பல்கலைக் கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வரும் என்கிற அறிவிப்பிற்கும் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி.பொன்னுச் சாமி, சத்தீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.