சேலம், செப்.27- குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீர மைக்க வேண்டும் என வலி யுறுத்தி அம்மாபேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலத் துக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண் டும், குழியுமாக உள்ளது. பல்வேறு திட்ட பணிகள் என்ற பெயரில் நீண்ட மாதங்களாக சாலைகள் பராமரிப்பு செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தங்குவதால் சுகாதார சீர்கேடுகள் வருகின் றன. குறிப்பாக, அம்மாபேட்டை முதல் பட்டை கோவில் வரை உள்ள சாலைகளில் எண்ணற்ற வாகனங்கள் செல்வதால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த துயரம் ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்ப டும் அபாயமும் உள்ளது. எனவே, மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாலைகளை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அம்மாபேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சேலம் கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். இதில், கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி.சுல்தான், பச்சமுத்து, சேட்டு, சேகர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.