districts

img

ரேசன் கடை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உதகை, டிச.29- முட்டிநாடு ஆடா பகுதியில் உட னடியாக பகுதிநேர ரேசன் கடை  அமைக்க வேண்டும், என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், முட்டிநாடு சுற்றுவட்டார பகுதிகளான செல் விப் நகர், ஈஸ்வரன் காலனி சிவ சந்தூர் நகர், முட்டிநாடு ஆடா பகு தியில் வசிக்கும் பொதுமக்கள் பயன் பெறுகின்ற வகையில், பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண் டும். உதகை மற்றும் குன்னூரிலி ருந்து அதிகரட்டிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் விடியல் பயண சலுகை வழங்க வேண்டும். குன்னக்கம்பை பகுதியில் உள்ள துணைமின் நிலையம் அருகே இருக்கக்கூடிய சுடுகாட்டில் மின்  மயானம் அமைக்க பேரூராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதனை செயல்படுத்த  தமிழக அரசு உடனடியாக தேவை யான நிதியினை ஒதுக்கி பணி யினை விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். முட்டிநாடு என்டிபி இலை சேகரிப்பு மையம் முதல் செல்விப்நகர் கோலனி மட்டம் வழி யாக காட்டேரி வரை உள்ள சாலை  பழுதடைந்துள்ளது. இச்சாலை யில் நாள்தோறும் பள்ளி குழந்தை கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமப்பட்டு பயன் படுத்தக்கூடிய நிலை உள்ளது. எனவே சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும். கொல்லி மலை ஓரநள்ளியில் இருந்து கோல ணிமட்டம் வழியாக காட்டேரி முட்டிநாடு செல்லும் சாலையை சீர மைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அதிகரட்டி கிளை சார்பில் ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதிகரட்டி பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் தொரை தலைமை வகித்தார். சிபிஎம் அதிகரட்டி கிளைச் செய லாளர் நடராஜ், அதிகரட்டி முன் னாள் கவுன்சிலர் சுசிலா, சிஐடியு  முன்னாள் மாவட்டச் செயலாளர்  ரமேஷ் அகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில்,  புஷ்பராஜ், பரசுராமன், நாகராஜ், ராஜன் குமார், ஆனந்தன் உள்ளிட்ட  60க்கும் மேற்பட்ட பெண்கள் மற் றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் உட னடியாக நிறைவேறாவிட்டால் விரைவில் பாலகொலா சந்திப்பு ஆறாம் மயில் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெறும், என  போராட்டக்காரர்கள் தெரிவித்த னர்.