உதகை, மார்ச் 17- காந்தல் பகுதி காவல் துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டு உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், உதகை மேல் தலை யாட்டு மந்து பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியன்று, ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக காந்தல் காவல் துறையினர் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ள னர். இதில், எழுந்து நடமாட முடியாத அள விற்கு அவரது இடதுகால் சேதமடைந்தது. இதையடுத்து சுரேஷ் கடந்த பல மாதங்க ளாக கோவையில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவரது மனைவி மாற்றுத்திறனா ளியான ஜெயசுதா தனது 2 பெண் குழந்தை களுடன் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரு கிறார். இதற்கிடையில், சுரேசை தாக்கிய 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், காவல் துறையினரின் தாக்குதலால் காயமடைந்த சுரேசிற்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளித்து பாது காக்க வேண்டும். சுரேஷ் மீது கடும் தாக்கு தல் தொடுத்த காவல் துறையினர் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளியான ஜெயசுதாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை ஏடிசி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் நவீன் சந்தி ரன் தலைமை வகித்தார். தாலுகாக்குழு உறுப்பினர் கணேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சங்கரலிங்கம், ரமேஷ், வினோத், சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பி னர் அலியார், குன்னூர் தாலுகா உறுப்பி னர் ராமன்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.