districts

img

தடங்கம் ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி ஆக-23, தடங்கம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி, வெள்ளியன்று மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தடாங்கம் ஊராட்சி தருமபுரி நக ராட்சிக்கு அருகில் உள்ள ஊராட் சியாகும். அதிக அளவிற்கு வரி வசூ லிக்கும் இந்த ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் செய்து தருவ தில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. கழிவு நீர் செல்ல வடிகால் இல்லை, ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் இல்லை, குண்டும் குழியுமான சாலை என அடிப்படை வசதிகள் இன்றி இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளது. மேலும்,  இந்த ஊராட்சி நகரப் பகுதியாக இருப்பதால் புதிய வீட்டுமனை பிரிப்பதற்கு, லட்சக்கணக்கில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பணம் பெறப்படுவதாகவும், புதிய  வீடுகட்ட அனுமதிபெற ஆயிரக் கணக்கில் பணம் பெருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி  உள்ளிட்ட பலரும் கோரிக்கை  மனுக்களை ஊராட்சி நிர்வாகத் திற்கு கொடுத்திருந்தனர்.  ஆனால் இதன் மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்காத நிலையில்,  மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  தடங்கம் ஊராட்சி அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன் றியக்குழு உறுப்பினர் கே.முனியப் பன் தலைமை வகித்தார். இதில்,   மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே.எல்லப்பன் ஒன்றியக் குழு உறுப் பினர்கள் காளி, எம்.அண்ணா துரை, ஆர்.வள்ளி, ஏ.ஆதிமூலம்,  வி,ராமஜெயம், ஜி.பி.விஜியன்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்தின்முடிவில் ஊராட்சிமன்றத் தலைவர் கவிதா விடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.