ஈரோடு, ஜூலை 12- ஈரோடு மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 58 மற் றும் 59 ஆவது வார்டு பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சனை களை உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொல்லம்பாளையம் ரவுண் டானா பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலா ளர் சி.பூரணச்சந்திரன் தலைமை தாங்கி னார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.முருகேசன், தாலுகா செயலா ளர் என்.பாலசுப்ரமணி, முன்னாள் காசி பாளையம் பேரூராட்சி தலைவர் கே. துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் என்.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.