districts

img

சரி செய்யப்படாத சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்!

திருப்பூர், நவ.10– சரி செய்யப்படாத சாலையில் தேங்கிய தண்ணீரில், காகிதக் கப் பல் விட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட பெரிய கடை வீதி மக்கள்  நெருக்கடி மிகுந்த பகுதியாகும். அத்துடன், போக்குவரத்தும் அதிக ளவில் உள்ளது. பெரிய பள்ளி வாசல், ஆயிரக்கணக்கான மாண விகள் படிக்கக்கூடிய மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வீர ராகவ பெருமாள் கோவில் உள்ளிட் டவை உள்ளன. இதற்காக தினந் தோறும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் இந்த பகுதியை கடந்து செல்லும். இங்கு குடிநீர் குழாய்  உடைப்பை சரி செய்ய ஓராண்டிற்கு முன் குழி தோண்டப்பட்டு, குழாய் சரி செய்யப்பட்டு குழி மூடப்பட் டது. இருப்பினும் சாலை அமைக் காததால் மீண்டும் அப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்  கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால்  பள்ளம் ஏற்பட்டு குடிநீர் பள்ளத்தில்  தேங்கி நிற்பதால் அவ்வழியே செல் லும் வாகன ஓட்டிகள் அவதிய டைந்து வருகின்றனர். இதுகுறித்து  மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஞாயிறன்று, பள்ளம் ஏற்பட்ட  பகுதியில் தேங்கியிருந்த குடிநீரில் காகிதங்களால் செய்யப்பட்ட கப் பலை விட்டுத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநகரக்குழு உறுப்பினர்கள் செந் தில், செல்லமுத்து, ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.