districts

img

சாமளாபுரம் பேரூராட்சியில் சிபிஎம் வேட்பு மனுத்தாக்கல்

திருப்பூர், பிப்.3- திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சியில் மார்க் ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம்,  சாமளாபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள் ளது. இதில், 15வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஏ.இ.சுப்பிரமணி (56), போட்டியிடுகிறார். இந்நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செய லாளர் பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேஷ், கிளை நிர்வாகிகள் சோமசுந்தரம், நாச்சிமுத்து, கனகராஜ் உள்ளிட்டோருடன் ஏ.இ.சுப்பிரமணி வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த 15வது வார்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ச்சியாக வெற்றி பெற்று  வருவது குறிப்பிடத்தக்கது.