districts

img

சிபிஎம் மனு: சாலைகளை சீரமைத்த மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர், டிச.30- சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சரி செய்ய கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி  மேயரிடம் வியாழனன்று மனு அளிக்கப்பட் டது. அதன் அடிப்படையில் சாலைகள் பழுது பார்க்கும் பணி வெள்ளியன்று தொடங்கப் பட்டது.  நீண்ட காலமாக செப்பனிடப்படாத  சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சரி செய்ய கோரி 17 வது வார்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார் பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட் டது. இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் பி. ஆர்.கணேசன், மாநகர குழு உறுப்பினர்கள் ப.சவுந்தரராசன், நந்தகோபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் இ.பி.ஜெய் கிருஷ் ணன், இ.பி.மரிய சிசிலியா உட்பட கட்சிகிளை  செயலாளர்கள்,வாலிபர் சங்க நிர்வாகிகள், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட குழு  உறுப்பினர் பாலகிருஷ்ணன்  ஆகியோர் பங் கேற்றனர். மனுவை பெற்றுகொண்ட மாநகராட்சி மேயர் மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து சாலைகளையும் சரி செய்யும் பணி முடிந்து விடும் அதற்கு முன்னதாக ஜனவரி முதல் வாரத்தில் நேரடியாக வந்து பார்வையிட்டு  முன்னுரிமை அடிப்படையில் பணிகளை செய்ய ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தார்.  அதன் அடிப்படையில் செல்வராஜ் நகர்  ஒன்றாவது வீதி, இரண்டாவது வீதி, செல்வ ராஜ் நகர் முக்கியசாலை, எம்.எஸ்.நகர் மூன் றாவது வீதி, டி.எம்.எஸ். நகர் முக்கியசாலை  பழுதுபார்க்கும் பணி வெள்ளியன்று தொடங் கப்பட்டது.