districts

img

சிபிஎம் இன்ஜினியரிங் அரங்க மாநாடு

கோவை, டிச.26– மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை  இன்ஜினியரிங் அரங்க 7  ஆவது மாநாடு ஞாயி றன்று கணபதி இன்ஜினி யரிங் தலைமை சங்க அலு வலகத்தில் நடைபெற் றது. எஸ்.ராமசாமி நினை வரங்கத்தில் நடைபெற்ற  மாநாட்டில், கட்சியின் செங்கொடியை கே.சௌந்தர் ராஜன் ஏற்றி வைத்தார். இம்மாநாட்டிற்கு ஏ.ஜி.சுப்பிர மணியம், எஸ்.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். இன்ஜினியரிங் அரங்க செயலாளர் டி.செந்தில்குமார் அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட்டில் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா உட்பட பலர் கலந்து  கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்ஜினியரிங் அரங்கக்குழு செயலாளராக எம்.தனபாண்டி உள் ளிட்ட 7 பேர் கொண்ட சிபிஎம் இன்ஜினியரிங் அரங்க குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.