districts

img

மாட்டிறைச்சி கடைகளை மட்டும் அகற்றுவதா?

ஈரோடு, நவ. 25 -  புஞ்சை புளியம்பட்டி நகராட்சியின் பராம ரிப்பில் உள்ள வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடைகளை மட்டும் அகற்றிய நகராட்சி நிர்வாகத்தின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புளி யம்பட்டி நகர கிளை செயலாளர் பி.என்.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், மனித உரிமை ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதா வது, புஞ்சைப் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தையில் 50க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகிறார்கள். இம்மக்கள் வாரச் சந்தை துவங்கிய காலம் முதலே மாட்டி றைச்சி விற்கும் தொழிலை செய்து வருகின்ற னர். நகராட்சி நடைமுறைகளுக்கு உட்பட்டு  சுங்கவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி இந்த தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த நவ.22 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் எந்த விதமான முன்னறி விப்பின்றி கடைகளை இடித்துள்ளனர்.

நக ராட்சியின் இந்த நடவடிக்கையால் இந்த  குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளது. அனைத்து இறைச் சிகளையும் சந்தையில் விற்க அனுமதித்த போது மாட்டு இறைச்சியை மட்டும் விற்க அனுமதி மறுப்பதும் ஒரு வகை தீண்டா மையை என கருதுகிறோம். ஆகவே அனைத் திற்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே வேறுபடுத்தி பார்ப்பது நல்ல முன்மாதிரியானது அல்ல. ஆகவே நகராட்சியின் சார்பில் மாட்டிறைச்சி விற்ப தற்கு கடைகளை அமைத்துக் கொடுத்தும் உட்கட்டமைப்பான குடிநீர் மின்சாரம் மற்றும் சுகாதார முறையில் வியாபாரம் செய்திட  அவர்கள் வாழ்வாதாரம் பாது காத்திட நக ராட்சி நிர்வாகம் அதை அவசர தேவையாக கருதி போர்க்கால அடிப்படையில் செய்து  கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக நகராட்சி ஆணையரிடம், மார்க் சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், துணைத் தலைவர் கௌரிசங்கர், அனைத்து வகை தொழிலாளர் ஐக்கிய தொழிற்சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை தொழிலாளர்களும் பங் கேற்றனர்.