சேலம், நவ.20- சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறை கேடு நடைபெற்றுள்ளதெனவும், அதில் சம் பந்தப்பட்ட அனைவரின் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாநக ராட்சி ஆணையரிடம் செவ்வாயன்று மனு அளித்தனர். சேலம் மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக் கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் பெரும்பாலும் அகற்றப்பட்டன. இருப்பினும் தற்போது சில கடை உரிமை யாளர்கள், சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். பேருந்து நிலை யத்தில் மைய நடைபாதையில் அனுமதியற்ற இரண்டு கடைகள் அகற்றப்படவில்லை. அதேபோல் பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதி ஆம்னி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள செப்டிக் டேங்க் மீது உணவகம் செயல் பட்டு வருகிறது. இதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கான குடி நீர் தொட்டியில் தண்ணீர் திருடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் கழிவறை பல வருடங் களாக திறக்கப்படதில்லை. கட்டண கழி வறைகளில் நபருக்கு ரூ.10 வீதம் நாள் ஒன் றுக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டண கொள்ளை நடைபெறுகிறது. மாநகராட்சி வாகன நிறுத் தம் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு மேல் கூடு தலாக ஆக்கிரமிப்பு செய்வதோடு, அங்கு வரும் வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூ.15 வீதம் வசூலிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட செயல்களுக்கு மாநக ராட்சி சூரமங்கலம் மண்டல வருவாய் ஆய் வாளர் வீரக்குமார் என்பவர் ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து மாந கராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வீரபாண்டியார் நகர் பகுதியில் சாக்கடை கால்வாயை அடைத்து, அதன் மீது கடையை வைத்து தினசரி வாடகை ரூ.1000 முதல் ரூ.2000 வரை சுமார் 20 கடை களிடம் சட்ட விரோதமாக வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நரசோதிப்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக பரா மரிக்க வேண்டும். சேலம் புதிய பேருந்து நிலையத்தின் மேற்கு புறம் உள்ள அம்மா சுற்றுச்சூழல் அரங்கம் பராமரிப்பு இல்லா மல், மக்கள் பணம் விரயமாகி வருகிறது. இதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், இதற் கான கட்டுமானப் பணிகளின் போது லட்சக் கணகான ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ள தாக கூறப்படும் நிலையில், விசாரித்து அனை வரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேலம் மாநகராட்சி பாதாள சாக் கடை திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங் களில் ஏற்கனவே இருந்த மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்ட அதிகாரிகள் முறைகேடு செய் துள்ளனர். இதனை முழுமையாக ஆய்வு செய்து தவறு செய்த அனைவரையும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாநகராட்சி ஆணையரிடம் செவ் வாயன்று மனு அளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செயலா ளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப் பினர்கள் ராஜேஷ், வெங்கடேஷ், செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.