திருப்பூர், பிப்.3- திருப்பூரில் திமுக மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் நிர்வாகிகளை வியா ழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம் முழுவதும் நகர் மன்ற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள் ளது. இந்நிலையில் திருப்பூர் மாந கராட்சியில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 8 வார்டுகளில் போட்டி யிடுகிறது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாநகராட்சி 1வார்டு வேட்பாளர் கோ. மீனாட்சி, 9வது வார்டு வேட்பாளர் க.வசந்தி, 14வது வார்டு வேட்பாளர் கவிதா ரங்கராஜ், 17வது வார்டு வேட்பா ளர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன், 28வது வார்டு வேட்பாளர் வீ. பால சுப்பிரமணியம், 29வது வார்டு வேட்பாளர் எஸ்.சின்னச்சாமி, 52வது வார்டு வேட்பாளர் கே. பொம்முதுறை, 53வது வார்டு வேட் பாளர் ர.மணிமேகலை உள்ளிட் டோர், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பி னர் க.செல்வராஜ், மாநகர மாவட்ட பொறுப்பாளர் நகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மாநில துணைச் செயலாளருமான கே. சுப்பரா யன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி கிருஷ்ணன், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகி முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி அபுசாலி உள்ளிட்டோரை சந்தித்து கதர் ஆடை அணிவித்து வாழ்த்து பெற் றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரங்கராஜ், தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு மாநகர செயலாளர் பி. ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.