திருப்பூர், மார்ச் 30 - திருப்பூர் ராயபுரம் சூசையாபுரத்தில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி தெருமுனைக் கூட்டம் புதனன்று மாலை நடைபெற்றது. ராயபுரம் கிளை செயலாளர் லாரன்ஸ் தலைமையில், கல்லம்பாளையம் செயலாளர் முகமது ஜாபர், மாநகர கமிட்டி உறுப்பினர்கள் பி.பாலன், பா.ஞானசேகர், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தரம், தெற்கு மாநகர செயலா ளர் த.ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.