districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு

தருமபுரி, செப்.22- மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு வட்டத்திலுள்ள கிளைகளில் மாநாடுகள் நடை பெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி,  பாலக்கோடு ஏ கிளைச் செயலாளராக கே.பாண்டியம்மாள், பி  கிளைச் செயலாளராக சி.கலாவதி, செங்கொடப்பட்டி கிளைச்  செயலாளராக பி.முருகன், வேப்பனஅள்ளி கிளைச் செயலா ளராக வி.சக்தி, மல்லும்பட்டி கிளைச் செயலாளராக சி. சுப்பிரமணியம், போயர்அள்ளி கிளைச் செயலாளராக ஏ. ராமகிருஷ்ணன், குத்தல்அள்ளி கிளைச் செயலாளராக வேடி,  எர்ரப்பட்டி கிளைச் செயலாளராக எம்.செல்வம் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று, பாப்பிரெட்டிப் பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து டி.துரிஞ்சிப்பட்டி கிளைச் செயலாளராக இளங்கோ, சந்தனூர்மேடு கிளைச் செயலாளராக மாதை யன், சிக்கம்பட்டி கிளைச் செயலாளராக பழனிவேல், காளிப் பேட்டை கிளைச் செயலாளராக இளவரசி, பி.பள்ளிப்பட்டி கிளைச் செயலாளராக சரவணன், பி.துரிஞ்சிப்பட்டி கிளைச்  செயலாளராக முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள்

கோவை, செப்.22- நரசிபுரம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை கூட்டத்தை வனத்துறையினர் வனப்பகுதிக் குள் விரட்டினர். கோவை மாவட்டம், நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன்  7க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சனியன்று முகாமிட்டிருந் தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயி கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு முகாமிட்டிருந்த யானை கூட் டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

சாலை விபத்தில் 24 பேர் படுகாயம்  சிபிஎம் தலைவர்கள், எம்எல்ஏ ஆறுதல்

ஈரோடு, செப்.22- அந்தியூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாய மடைந்த 24 பேரை நேரில் சந்தித்த, சிபிஎம் தலைவர்கள் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்க லம் பகுதியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், கரும்பு  வெட்ட நான்கு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர். கெட்டிச முத்திரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த வாகனம் ஆலயங் கரடு பகுதியில் விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் வாகனத் திலிருந்த 24 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கி ருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அந்தியூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி  அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த மக்கள், வேலை கேட்டு போராட்டம்

சேலம், செப்.22- மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலம்  கொடுத்த மக்கள், வேலை வழங்கக்கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்  நிலையம் கட்டப்பட்டபோது, அனல் மின்  நிலையத்தின் பின்னால் உள்ள புது சின்னக் காவூர், புதுரெட்டியூர் கிராம பகுதிகளில் சாம் பல் ஏரிக்காக நிலம் கையகப்படுத்தப்பட் டது. அப்போது அங்கிருந்த 358 குடும்பத்தின ருக்கு வீட்டுமனைப் பட்டா, வேலை வாய்ப்பு,  அவரவர் நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை வழங்குவதாக அனல்  மின் நிலைய நிர்வாகத்தின் சார்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த  2002 ஆம் ஆண்டு பொதுமக்கள், கிராமத்தை  காலி செய்தனர். நிலம் கொடுத்தவர்களில் 162 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு வேலை  வழங்கப்படவில்லை. வேலை கிடைக்காத கிராம மக்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு பல ஆண்டுகளாக விசாரணை அளவிலேயே உள்ளது. இந் நிலையில், தங்களுக்கு வேலை வழங்குவ தில் மேட்டூர் அனல் மின் நிலைய நிர்வாகம்  தேவையற்ற காலதாமதப்படுத்துவதாகக் கூறி, சனியன்று புது சின்னக்காவூர், புது ரெட்டியூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பொக்லைன் இயந்திரத்துடன் பழைய கிரா மத்திற்கு வந்தனர். தொடர்ந்து, தாங்கள் ஏற் கெனவே குடியிருந்த பகுதியில் வளர்ந்தி ருந்த செடி, கொடி, மரங்களை அப்புறப்ப டுத்தி, குடியேற முயன்றனர். இதுகுறித்து தக வலறிந்த மேட்டூர் அனல் மின் நிலைய நிர்வா கத்தினர், கருமலைக்கூடல் காவல் துறையி னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக அதிகாரிகள் அளித்த உறுதி யின்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.