districts

img

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துக

சேலம், டிச.18- பெத்தநாயக்கன் பாளையம் அரசு மருத்து வமனையை தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன் பாளையம் வட்ட 2 ஆவது மாநாடு  பி.ராஜீ, பி.தர்மலிங்கம், அர்ச்சுணன் நினைவரங் கில் நடைபெற்றது. மூத்த தோழர் எம்.ரங்கசாமி செங்கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.குழந்தைவேல், ஆர். வெங்கடபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிக்கையை சமர்ப்பித்து என்.கிருஸ்ணமூர்த்தி பேசினார். இதைத் தொடர்ந்து பெத்த நாயக்கன் பாளையம் தாலுகா செயலாளராக காளிதாஸ் உட்பட 7 பேர் கொண்ட தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாநாட்டில், பெத் தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை யில் அனைத்து சிகிச் சைகளும் அளிக்கப்படும் வகையில் அதனை தரம் உயர்த்த வேண்டும். அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். மேட்டூர் உபரி நீரை சேலம் கிழக்கு பகுதி விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.