அவிநாசி, ஆக.19 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய மாநாடு செப்டம்பர் 29ஆம் தேதி திருமுருகன்பூண்டி யில் நடத்தப்படுகிறது. இம் மாநாட்டை நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மது ரையில் நடைபெறுகிறது. முன்னதாக தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜன வரி மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கட்சியின் அவிநாசி ஒன்றிய 12ஆவது மாநாடு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. திருமுருகன் பூண்டி நக ராட்சியில் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவ தற்கு ஞாயிற்றுக்கிழமை, தனியார் திருமண மண்ட பத்தில் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடத்தப் பட்டது. நகர்மன்ற உறுப்பி னர் சுப்பிரமணி தலைமை யில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால் முன்னிலையில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 46 பேர் கொண்ட வரவேற்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. வரவேற்புக் குழுத் தலைவராகபி.தேவ ராஜன், துணைத் தலைவர்க ளாக வெங்கடாசலம், காம ராஜ், ராசு, வையாபுரி, செய லாளராக பாலசுப்பிரமணி யம், துணைச் செயலா ளராக வேலுச்சாமி, சண்மு கம், மோகனசுந்தரம், ராஜன், பொருளாளராக சுப்ரமணி யம் உள்ளிட்டோர் நிர்வாகி களாகத் தேர்வு செய்யப்பட் டனர்.