districts

img

சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவுதினம் அனுசரிப்பு

கோவை, ஜன.8-  சின்னியம்பாளையம் தியாகி களின் 76 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி  சனியன்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி சின்னியம்பாளையத்தில் உள்ள தியாகிகள் மேடையில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போராட்டத்தின் அடை யாளமாய் சின்னியம்பாளையம் தியாகிகள் திகழ்கிறார்கள்.  இவர் களின் நினைவுதினத்தை ஒவ் வொரு ஆண்டும்  மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து அனுசரித்து வருகிறது. இதன்ஒருபகுதியாக சனியன்று சின்னியம்பாளையம் தியாகிகள் 76 ஆம் ஆண்டு நினைவுதினம் எழுச்சிகரமாக அனுசரிக்கப்பட் டது.   சின்னியம்பாளையம் தியா கிகள் மேடையில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஎம் கிளை செய லாளர் பாலகிருஷ்ணன் தலைமை  தாங்கினார். சிபிஐ கிளை செயலா ளர் சுரேஷ் வரவேற்புரையாற்றி னார்.  முன்னதாக இரண்டு கம்யூ னிஸ்ட் கட்சிகளின் கொடிகளை தலைவர்கள் ஏற்றிவைத்தனர். இதனைத்தொடர்ந்து தியாகி கள் மேடைக்கு இரு கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் சார் பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதனைத்தொடர்ந்து நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினருமான கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ்,  ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.