தருமபுரி, டிச.19- பட்டியலின மக்களின் நீண்ட கால அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், எனக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியி னர் வியாழனன்று தருமபுரி கோட்டாட்சியர் இரா.காயத்திரி யிடம் மனு அளித்தனர். தருமபுரி வட்டம், கோடுஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேப்ப மரத்தூர் காலனியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்ற னர். இக்கிராமத்திற்குட்பட்ட ஒரு பகுதியினர் அரசு புறம் போக்கு நிலத்தை சுமார் நூறு ஆண்டுகளாக அனுபவம் செய்து வருகின்றனர். கரடுமுரடாக இருந்த நிலத்தை பண்ப டுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். கோடுஅள்ளி வருவாய் கிராம புல எண்:110/3இல் உள்ள 30 சென்ட் நிலமும், 110/4 இல் உள்ள 20 சென்ட் நிலத்தை மூக்கன் என்ற விவசாயி நீண்ட ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலம் ஆட்சேபனையற்ற நிலமாகும். தமிழ்நாடு வருவாய் நிலை ஆணை 26 ஆனது ஆட்சேபனையற்ற அனுபவ நிலத்தில் இருந்து வெளியேற்றக்கூடாது என குறிப்பிட்டுள்ளது. மேலும், வருவாய் நிலை ஆணை 15 ஆனது ஆட்சேபனை யற்ற நிலத்திற்கு பட்டா வழங்கலாம் எனுவும் குறிப்பிட் டுள்ளது. அனுபவ நிலங்களுக்கு வரியும் செலுத்தி வருகின்ற னர். இந்நிலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி கட்டிடம் கட்ட மேற்கண்ட விவசாயின் நிலத்தை அதி காரிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், வேப்ப மரத்தூர் பள்ளியின் அருகே 9 ஏக்கர் 80 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் யாருடைய அனுபவத்திலும் இல்லை. இச்சூழலில் விவசாய நிலத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதாக கிராம நிர்வாக அலுவலர் மூலம் விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுபவத்தில் இல்லாத அரசு புறம்போக்கு நிலம் இருக்க, அனுபவ நிலத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவது பட்டியலின மக்க ளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, வேறு இடத்தில் அரசுப்பள்ளி கட்டிடம் அமைக்க வேண்டும். நீண்டகால அனுபவ நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விசுவநாதன், தி.வ.தனுசன், தருமபுரி ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி, வாலிபர் சங்க நிர்வாகி குப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.