வீட்டு மின் கட்டணம் ரூ.70 ஆயிரமா?
தம்பதி அதிர்ச்சி - ஆட்சியரிடம் புகார்
கோவை, ஜன.10- கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டின் மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் என வந்துள்ளதாக அதிர்ச்சிய டைந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். கோவை, கரும்புக்கடையை அடுத்த சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (58). இவரது மனைவி ரபியா (47) ஆகி யோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் சாரமேடு பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது குடும்பத்தில் 4 பேர் மட்டுமே உள்ளோம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மின் கட்டணம் ரீடிங் எடுப்ப தற்காக அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மின் அளவை குறித்து சென்று விட்டனர். அதன்பின் எங்கள் செல்போன் எண்ணுக்கு மின் கட்டணம் குறித்து குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந் தோம். அதில் மின் கட்டணம் ரூ.70 ஆயிரம் என வந்துள்ள தாக இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டோம். அதற்கு அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டாம். 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். அதுவும் வாரம் 6 ஆயிரம் கட்டுங்கள் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின் வாரியத்தில் புகார் அளித்தோம். ஆனால், அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வரும். 2 மாதங்களுக்கு முன்பு 1200 ரூபாய் மின் கட்டண மாக வந்தது. தற்போது ரூ.70 ஆயிரம் வந்துள்ளது. இது குறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.
சந்தனமரம் கடத்தல்: ஒருவரிடம் விசாரணை
கோவை, ஜன.10- கோவையில் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் கார்த்திக் மாரியப்பன் (42). தனியார் நிறுவன ஊழியரான இவரது வீட்டின் அருகே உள்ள வளாகத்தில் சந்தன மரம் இருந்துள்ளது. இந்நிலையில், அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால், சந்தே கமடைந்த அவர் வெளியே வந்து பார்த்த போது, அங்கிருந்த சந்தன மரத்தின் சிறிய பகுதியை அடையாளம் தெரி யாத நபர்கள் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட் களாக கோவையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து சந்தன மரங்களை வெட்டி கடத்துப வர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக் கப்பட்டது. அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனை பார்க்கச் சென்ற தந்தை மீது தாக்குதல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேலம், ஜன.10- நீதிமன்ற உத்தரவின்படி மகனை பார்க்க சென்ற தந்தையை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட் டவர் வலியுறுத்தி உள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு பகுதியைச் சேர்ந்த பூபதி ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த மேனகா பிரியா என்பவருடன் திரு மணம் நடைபெற்று, 7 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து எட்டு மாதத்திற்கு முன்பு பூபதிக்கும் மேனகா பிரியாவிற்கும் விவாகரத்து நடை பெற்றது. மேலும், மாதம் இரண் டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக் கிழமை குழந்தையை சந்திக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப் படி சின்ன திருப்பதி பகுதியில் பெற் றோருடன் வசித்து வரும் மனைவியின் வீட்டில் மகனை காணச்சென்றபோது, அங்கு பூபதி மீது தாக்குதல் நடை பெற்றது. மேலும், மேகனா பிரியாவின் உறவினர்கள் மகனை பார்க்க வரக் கூடாது எனக்கூறி பூபதி மீது புகார் அளித்துள்ளனர். இதனிடையே அம்மா பேட்டை மகளிர் காவல் துறையினர் பூபதி அழைத்து பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது, நீதிமன்றத்தின்படி மகனை பார்ப்பேன் என்று தந்தை கூறிய தால், பூபதிக்கும் அம்மாபேட்டை மகளிர் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது காவல் ஆய்வாளர் பூபதியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இத னால் பூபதி சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து சிகிச்சை பெற்று வரும் பூபதி கூறுகையில், நீதிமன்ற உத்தர வுபடியேதான் செயல்பட்டதாகவும், என் மீது எந்த தவறும் இல்லை. எனது மகனை பார்க்க விடாமல் எனது மனைவி மற்றும் உறவினர்கள் தடுத்து வரு கின்றனர். மேலும், தவறான புகாரை அளித்து உள்ளனர். புகாரை சரியாக விசாரிக்காமல் காவல் ஆய்வாளர் என்னை கடுமையான தாக்கியுள்ளார். எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி மகனை பார்க்க அனுமதி வழங்க வேண்டிய காவல் துறையினர், எந்தவித தவறும் செய்யாத என்னை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
தருமபுரி, ஜன.10- தருமபுரி மாவட்டம், நாய்க்கனஅள்ளி ஊராட் சிக்குள்பட்ட சோலைக் கொட்டாய் கிராம மக்கள் திங்களன்று ஆட்சியா் அலு வலகத்தில் அளித்த மனு வில் தெரிவித்துள்ளனர். சோலைக்கொட்டாய் கிராமத்தில் அரசு மேல் நிலைப் பள்ளி, தனியார் கல்லூரி ஆகியவை அமைந் துள்ளன. இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால், மாணவர்கள் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்குள்ளா கும் சூழல்நிலை ஏற்படும். எனவே, சோலைக்கொட் டாய் கிராமத்தில் மதுக்கடை அமைக்கும் முயற்சியைக் கைவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர்.
கர்நாடகாவில் தேசிய இளைஞர் தின விழா சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவன் பங்கேற்பு
திருப்பூர், ஜன.10 - கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாநகரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவில் திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் ரமேஷ் பங்கேற்கிறார். கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹூப்ளி மாநகரத் தில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ( ஐந்து நாட்கள்) தேசிய இளைஞர் தினம் நடைபெறுகிறது. அவ்விழா வில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத் திலிருந்தும், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் நாட்டு நலப் பணி திட்ட மாணவ, மாணவிகள் 1000 பேர் தேர்வாகியுள்ளார் கள். அதில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலை கழகங்களிலிருந்து 150 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். கோவை பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இருந்து 10 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் தேர் வாகியுள்ளார்கள். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் ரமேஷ் (மூன்றா மாண்டு பொருளாதாரம்) இந்த விழாவில் கலந்து கொள்கி றார். இவர் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை செவ் வாய்கிழமை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் விநாய கமூர்த்தி, ஹரேஷ் பாண்டியா மற்றும் மாணவர்கள் வழிய னுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் இளைஞர் ஆளுமை, மாநிலத்தின் கலாச் சாரம், தேசிய ஒருமைப்பாடு போன்ற நிகழ்வுகள் நடைபெ றுகிறது.
அரசு திட்டங்களை முஸ்லிம் மகளிர் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
திருப்பூர், ஜன.10 - தமிழகத்தில் அரசு திட்டங்களை முஸ்லிம் மகளிர் பயன்ப டுத்தி பயன் பெற வேண்டும் என திருப்பூரில் நடந்த ஆலோ சனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் இதயத்துல்லா கூறினார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் கூட்டமைப்பின் வட மேற்கு மண்டல ஆய்வுக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் இதயத்துல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், முஸ்லிம் மகளிர்களுக்கு ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக முஸ்லிம் மகளிர் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி மீண்டும் மாநில அரசுக்கே திரும்பிச் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. இவற்றை முழுமையாக பயன்படுத்த அந்தந்த மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தி அவைகளை முறையாக பயன்படுத்தும் வகையில் ஏற் பாடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம் உதவி சங்கத்தை சேர்ந்தவர்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால், ரூ.60 லட்சம் வரை பயன் கிடைக்கும் வகை யில் அரசு திட்டம் தற்போது உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசு ரூ.24 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த தொகையில் இருந்து முஸ்லிம் மகளிர் பெறுவது ரூ.3 அல்லது ரூ.4 கோடி மட்டுமே தான். இதனால் இந்த பணத்தை முறையாக பெற்று முஸ்லிம் மகளிரை பயன்பெற செய்ய வேண்டும் என்பதற்காக, மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம் என இதயதுல்லா தெரிவித்தார்.
சிறப்பு கடன் வழங்கும் முகாம்
திருப்பூர், ஜன.10 - திருப்பூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மக ளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்துவ தாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார். பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 19ஆம் தேதியும், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20 ஆம் தேதியும், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 21 ஆம் தேதியும், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் 24ஆம் தேதியும், உடுமலை வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் 25ஆம் தேதியும் சிறப்பு கடன் வழங்கும் முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற வுள்ளன. சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் உள்ள கிராம ஊராட்சிக ளில் நிரந்திர குடியிருப்பு ஆவணங்களில் உள்ள பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மானிய உதவியை பயன் படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிலுவை கட்டணம் செலுத்தி ஆவணங்களை பெற்றுக் கொள்ள அழைப்பு
திருப்பூர், ஜன.10 - திருப்பூர் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் குறைவு முத்திரைத் தீர்வை நிலுவைக் கட்டணம் செலுத்தி அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும்படி பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங் களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் இந்திய முத் திரைச் சட்டம் 1899 பிரிவு 47யு(1)-ன் கீழ் 319 ஆவணங்கள், பிரிவு 47யு(3)-ன் கீழ் 838 ஆவணங்கள், பிரிவு 19டீ(4)ன் கீழ் 60 ஆவ ணங்கள் குறைவு முத்திரைத்தீர்வை செலுத்துவதற்காக நிலுவையில் உள்ளன. குறைவு முத்திரைத்தீர்வை நிலுவை குறித்த பதிவு வில் லங்கக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நிலுவை ஆவ ணச் சொத்தினை விற்பனை, பரிவர்த்தனை, வங்கிக்கடன் அடமானம் போன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்திட இய லாது. நிலுவைத் தொகைக்கு மாதாந்திர வட்டி கணக்கிடப் பட்டு ஆவணதாரர் செலுத்திட வேண்டிய தொகை அதிகரித்து கொண்டே இருப்பதால் நிலுவைதாரர்களுக்கு நிதிச்சுமை ஏற் படுகிறது. இந்நிலையில் தற்போது இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19டீ(4)இ, 47யு(1) மற்றும் 47யு(3) மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு நிலுவைத் தொகையினை வசூலித்து ஆவணங்களை ஆவண தாரர்களுக்கு திரும்ப ஒப்படைக்கும் பொருட்டு, சென்னை பதி வுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை எண்: 46204/எல்3/2022-ன் படி ஜனவரி 1ஆம் தேதி முதல்மார்ச் 31 ஆம் தேதி வரை சிறப்பு முனைப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண்: 126-ல் (முதல் தளம்) செயல்படும் திருப்பூர் தனிவட்டாட்சி யர் (முத்திரைகள்) அலுவலகத்திலும், தாராபுரம் வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தாராபுரம் தனிவட் டாட்சியர் (முத்திரைகள்) அலுவலகத்திலும் தொடர்புடைய நிலுவை ஆவணதாரர்கள் தங்களுடைய ஆவணத்திற்குரிய தொகையை அரசுக்கணக்கில் செலுத்தி, அசல் ஆவணத் தைப் பெற்றுக் கொள்ளலாம் என கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) தெரிவித்துள்ளார்.
ரூ.7 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
திருப்பூர், ஜன.10- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங் கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.7 லட்சத்துக்கு வர்த்தகம் நடை பெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 201 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,700 முதல் ரூ.8,140 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7, 300 முதல் ரூ.7,600 வரையி லும், மூன்றாவது ரக நிலக்க டலை ரூ.7,000 முதல் ரூ.7,150 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:49.23/60அடி
நீர்வரத்து:834கன அடி
வெளியேற்றம்:974கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 86.16/90அடி
நீர்வரத்து:144கனஅடி
வெளியேற்றம்:445கன அடி
ஆளுநர் ரவி உருவ பொம்மையை எரிக்க முயற்சி: 20 பேர் கைது
திருப்பூர், ஜன. 10 - திருப்பூரில் ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக சட்டமன்றம் திங்கள் கிழமை கூடிய நிலையில் தமிழக சட்டமன்றத் தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், பேரறி ஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடா மல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் செவ்வாய்க்கிழமை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழ கத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில் அவரது உருவ பொம் மையை எரிக்க முயற்சித்தனர். இதில் காவல் துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இத னையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தி னரை காவல்துறையினர் வலுக்கட்டா யமாக கைது செய்தனர். இதில் கலந்து கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி, ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.