districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஓடையில் கலக்கும் கழிவுநீர்: சிபிஎம் மனு

நாமக்கல், நவ.15- சாயக்கழிவு மற்றும் சாக்கடை கழிவுநீர் ஆகியவை அரு வங்காடு ஓடையில் சென்று கலப்பதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடுத்து நிறுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் இயங்கி வரும்  அருவங்காடு ஜவுளி பூங்காவில் இருந்து வெளிவரும் கழிவு நீர், அருகே உள்ள அருவங்காடு ஓடையில் சென்று கலக்கி றது. மேலும் ஓடை அருகே செயல்பட்டு வரும் இரண்டு சாயப் பட்டறைகளில் இருந்து வரும் சாயக்கழிவுகளும்,  அதே  ஓடையில் சென்று தான்  கலக்கிறது. இதனால் சுற்றுவட் டாரத்தில் உள்ள விவசாய கிணறுகள், விளை நிலங் கள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப் படுகிறது.  எனவே, சாயக்கழிவு, சாக்கடை கழிவுநீர் ஆகியவை ஓடை யில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளரை சந்தித்து அருவங்காடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனேந்திரன், மணிகண்டன், அரு வங்காடு கிளைச் செயலாளர் கருப்பணன், வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஔவையார் விருதுக்கு கருத்துக்கள் வரவேற்பு
கோவை, நவ.15- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த வருக்கு 2024 ஆம் ஆண்டில் உலக மகளிர் தினவிழா அன்று ஒளவையார் விருது வழங்கிட, சிறந்த சேவை புரிந்த மகளிர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஒளவையார் விருதுக்கு பரிந் துரை செய்பவர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட வராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச் சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் மிகசிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.  பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதிற்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழகஅரசினர் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.kov.in பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர் கள் இணையதளத்தில் 20.11.2023-க்குள் பதிவுசெய்த பிறகு  அனைத்து ஆவணங்கள் அடங்கிய கருத்துருவினை மாவட்ட  சமூகநல அலுவலகத்தில் 22.11.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.18ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
சேலம், நவ.15- மின்னாம்பள்ளியில் நவ.18 ஆம் தேதியன்று சிறப்பு  தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள் ளது.  இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மே கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஏற்கனவே இரண்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்  நடத்தப்பட்டு விட்டன. மூன்றாவதாக நவ.18 ஆம் தேதி யன்று மின்னாம்பள்ளி அருகே உள்ள இராமலிங்கபுரம் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு  தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ஜவுளி,  வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியி டங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய வுள்ளனர். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடை பெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம்  வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்ப டிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற் கல்வி  போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியினை உடைய வர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுப வர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை யதளத்தில் பதிவு செய்ய வேண்டும் . இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்

உயர்கல்வி படிக்க முடியாத நிலையில் மாணவி

சேலம், நவ.15- தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட் சியம் காரணமாக மாணவி ஒருவர் உயர் கல்வி பயில செல்ல முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி, சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தார்.  இதுகுறித்த விபரம் வருமாறு, சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபு ரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமதி. அவர் ஓமலூர் பகுதியில் உள்ள தனி யார் பள்ளியில் படித்து, தற்போது சிக்கனம்பட்டி பகுதியில் உள்ள தனி யார் கல்லூரியில் இளங்கலை கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், பதினோராம் வகுப்பு  படித்தபோது பள்ளி நிர்வாகம் செய் முறை தேர்விற்கான மதிப்பெண்கள் வழங்கவில்லை. தற்போது படிக்கும் கல்லூரியில் உரிய மதிப்பெண் சான் றிதழ் தேவை எனவும், இல்லை என் றால் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந் தமாக மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம் முறையிட்டும், உரிய வழிகாட்டுதல் தரவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தான்  தொடர்ந்து கல்லூரி செல்ல உதவிபுரிய  வேண்டும் என மனு அளித்துள்ளார்.

பீளமேட்டில் இன்று மின் தடை
கோவை, நவ.15- பீளமேடு துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (இன்று) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரதி  காலனி, இளங்ஸ்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர்,  காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், கணேஷ் நகர், நேரு  வீதி, பி.எஸ்.ஜி மருத்துவமனை, ஆறுமுக லே-அவுட், பங்கஜா மில், பாரதிபுரம், அம்மன் குளம், ராஜாஜி நகர், உடை யாம்பாளையம், மீனா எஸ்டேட், காந்தி நகர், அத்திப்பா ளையம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநி யோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் மூதாட்டி பலி

தருமபுரி, நவ.15- அறுந்து விழுந்திருந்த மின்கம்பி மீது தெரியாமல் கால் வைத்து மூதாட்டி உயிரி ழந்த நிலையில், மின்வாரியத் தின் அலட்சியமே இதற்கு கார ணம் என உறவினர்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீழ்மொரப் பூர் கிராமத்தைச் சேர்ந்த  மாரப்பன் என்பவரின் மனைவி பூவி (55). இவர் தனியார் பால் சென்டருக்கு பால் எடுத் துக் கொண்டு கனகராஜ் என்பவரின் தோட்டம் வழி யாக சென்று கொண்டிருந் தார். அப்போது, பால் ஊற்ற அவசரமாக சென்ற பூவி, தோட்டத்தில் அறுந்து விழுந் திருந்த மின் கம்பி மீது தெரி யாமல் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து பக்கத்து தோட் டக்காரர் பால் எடுத்து வரும் போது, பூவி இறந்து கிடந் ததைப் பார்த்து அக்கம் பக் கத்தினருக்கு தகவல் தெரி வித்துள்ளார். பிறகு மின் துறை யினருக்கு தகவல் தெரிவித் ததையடுத்து, மின்சாரம் துண் டிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சடலத்தை மீட்டு, அரூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். இந்நிலையில், இப்பகுதி யில் மின் கம்பிகள் அனைத் தும் எட்டிப் பிடிக்கும் உய ரத்தில் இருப்பதாகவும், இது சம்பந்தமாக பலமுறை தக வல் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தாழ்வான மின் கம்பிகள் குறித்து மின்சார துறையின ருக்கு தகவல் கொடுக்கப் பட்ட பிறகும், அலட்சியப் போக்கே தற்போது உயிர் பலி ஏற்பட்டதற்கு காரணம் என உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். இச்சம் பவம் குறித்து மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

பேரூராட்சி தலைவர் மீது கவுன்சிலர்கள் புகார்

தருமபுரி, நவ.15- பாப்பிரெட்டிப்பட்டி பேரூ ராட்சி தலைவர் மீது நம் பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் 8 பேர் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுகவைச் சேர்ந்த 13 பேர் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் தலா  ஒருவர் என 15 பேர் கவுன் சிலர்களாக உள்ளனர். பேரூ ராட்சி தலைவராக திமுக வைச் சேர்ந்த மாரி, துணைத் தலைவராக ரவி ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன் சிலர்கள் 8 பேர் சேர்ந்து, பேரூ ராட்சி தலைவர் மாரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், பாப்பிரெட்டிப் பட்டி பேரூராட்சியில், அன் றாட அத்தியாவசிய தேவை பணிகளை செய்யவிடாமல் செயல் அலுவலரை, பேரூ ராட்சி தலைவர் மாரி தடுத்து வருகிறார். இவரது நெருக் கடியால், ஏற்கனவே பணி யாற்றிய செயல் அலுவலர் மருத்துவ விடுப்பில் சென்று  விட்டார். வாணியாறு அணையிலி ருந்து பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத் துக்கு, குழாய் அமைக்க 1.38 கோடி ரூபாய்க்கு டெண் டர் முறையாக போடப்பட் டுள்ளது. தனக்கு ஒத்து ழைப்பு வழங்காத செயல் அலுவலர் மீது வேண்டு மென்றே பழி சுமத்தி வருகி றார். எனவே, இவரை பேரூ ராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

குடியிருப்பைச் சுற்றி அகழி அமைப்பு

உதகை, நவ.15- நீலகிரி மாவட்டம், பந்த லூர் தாலுகாவைச் சுற்றி யுள்ள சேரம்பாடி, காப்பிக் காடு, எருமாடு, குழிவயல் போன்ற கிராமங்களுக்குள், இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து மக் களை அச்சுறுத்தி, வீடுகளை சேதப்படுத்திய வருவது தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக, குறும்பர் பழங் குடியினர் மக்கள் வசித்து வரும் குழிவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடியிருப்புகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தங்கள் கிராமத்திற்கு அகழி அமைத்து தர வேண்டுமென பழங்குடி யின மக்கள் வனத்துறையை வலியுறுத்தி வந்தனர். இத னைத்தொடர்ந்து, குழிவயல் கிராமத்தைச் சுற்றி சுமார்  இரண்டு கிலோ மீட்டர் தூரத் திற்கு வனத்துறை சார்பில், அகழி அமைக்கப்பட்டது.