சொந்த கார்கள் பறிமுதல்
நாமக்கல், டிச.23- திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவல கத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் இருந்து வெப்படை செல்லும் சாலையில் வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது வெப்படையிலிருந்து வேலாயுதம் பாளையம் சென்று கொண்டிருந்த 2 சொந்த வாகனங்கள் (கார்கள்) பயணிகளை வாடகைக்கு ஏற்றி வந்தது தெரிய வந் தது. இதனால் அந்த 2 கார்களையும் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா சிறைபிடித்து அந்த ஓட்டுநர்களை எச்ச ரித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு அனு மதி உள்ள வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தாமல் சொந்த வாகனங்களை பயன் படுத்தினால் காப்பீடு நிறுவனத்தில் பயணிகளுக்கு வழங்கப் படும் இழப்பீடு ஏதும் கிடைக்காது எனவும் தெரிவித்தார். மேலும் சுற்றுலா வாகனம் ஒன்று தகுதி சான்று புதுப்பிக்கா மல் இயங்கியது. அதனையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 3 வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவ லகத்தில் நிறுத்தப்பட்டன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கம்
கோவை, டிச.23- உருமாறிய கொரோனா நோய்த்தொற்று வெளி நாடுகளில் வேகமாக பரவி வருவ தன் எதிரொலியாக, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் கொரோனா பரிசோதனை மையம் வெள்ளி யன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலை யில், விமான பயணிகளை கண்காணிக்க மீண்டும் தெர்மல் ஸ்கேனரை செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் வெள்ளி யன்று முதல் பயணிகளை கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் கொரோனா பரிசோதனை மையத்தினை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் துவக்கி வைத் தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. மொத்தம் 22 விமானங்கள் கோவை விமான நிலையத் திலிருந்து இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய் யப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு நோய்த் தொற்று இருந்தால் 14 நாட்கள் கண்கா ணிக்கப்படும் என தெரிவித்தார். விமான நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருவதாகவும், விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தும் அறை தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதே போல ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறை தயார் நிலையில் உள்ளதாகவும், அவர் தெரி வித்தார். மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய தற்கான ஆவணங்களின் பெயரில் பயணச் சீட்டு வழங்கப்பட்டு வருவதாகவும், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசிஆர் பரிசோ தனை செய்யப்படுவதாகவும், செந்தில்வள வன் தெரிவித்துள்ளார்.
பூக்கள் விலை உயர்வு
நாமக்கல், டிச.23- பள்ளிபாளையம் பகுதி யில் உள்ள பூக்கடைகளில் வெள்ளியன்று வழக்கத்தை காட்டிலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் பூக்கடை உரிமையாளர்கள் கூறுகை யில், கிருஸ்துமஸ், புதுவரு டம் என தொடர்ந்து விழா தினம் என்பதாலும், பனிப் பொழிவு அதிகமாக இருப்ப தால் பூக்கள் வரத்து குறைந் துள்ளது. மேலும், சபரிமலை சீசன் என்பதால் வழக்கத்தை காட்டிலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால், மல்லிகை ரூ.1,200க்கும், முல்லை ரூ.1000-க்கும், ஜாதி மல்லி ரூ.480-க்கும், காக்கடா ரூ.360க்கும் விற்பனை ஆகி றது, என்றனர்.
அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி
திருப்பூர், டிச. 23- திருப்பூர் மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை நாட் களில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தர விட்டுள்ளதால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் 80, மேல்நிலைப் பள்ளிகள் 150 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 10 என மொத்தம் 240 பள்ளிகள் உள்ளன. இந்நிலை யில், அரையாண்டு விடுமுறை டிச. 24 முதல் தொடங்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாண வர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வரும் 31-ஆம் தேதி நடத்த கல்வித்துறையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு மாவட்டங் களில் இதுபோல் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் என்றனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு வளர்ச்செல்வி கூறுகையில், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிட்டோம். அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவே, வகுப்புகள் நடத்த திட்ட மிட்டோம், என்றார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 48.45/60 அடி
நீர்வரத்து: 106 கன அடி
வெளியேற்றம்: 27 கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.24/90அடி.
நீர்வரத்து: 408 கனஅடி
வெளியேற்றம்: 513 கன அடி
பெரியகோட்டை ஊராட்சியில் குவிந்து கிடக்கும் பிரச்சனைகள்
மார்க்சிஸ்ட் கட்சியின் கவன ஈர்ப்பு இயக்கம்
திருப்பூர், டிச. 23- உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சியில் குவிந்து கிடக்கும் பிரச்சனைகள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் சிவசக்தி காலனி கிளை சார்பில் கவன ஈர்ப்பு பிரச்சார இயக்கம் தொடங் கப்பட்டுள்ளது. பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாக் கடைகளை தூர் வாரவும், புதிய வடிகால் அமைக்கவும், ஊராட்சி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க, சோலார் விளக்குகள் அமைக்க, பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைக்கவும், தெருவோரம் வளர்ந்து இருக்கும் விஷ செடி களை, புதர்களை அகற்றவும், ஊராட்சியில் மருத்துவ முகாம் நடத்தவும், ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், மாணவர்களுக்கான கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும், மாநில அரசு மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வலியு றுத்தியும், ஒன்றிய அரசின் நாசகார கல்விக் கொள்கை, இந்தி மொழி திணிப்பு, மத வெறியை தூண்டி மக்களைப் பிளவு படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும் இந்த தெரு முனை பிரச்சார இயக்கம் புதன் கிழமை தொடங்கப்பட்டது. மக்கள் கோரிக்கைகளுக்காக இந்த கவன ஈர்ப்பு இயக்கம் வரும் 26ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடை பெறுகிறது. இந்த இயக்கத்தில் சிவசக்தி காலனி கட்சி கிளை செய லாளர் நட்ராஜ் அய்யாவு, உடுமலை துரையரசன் சுராஜ், தோழன்ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதவி மின் பொறியாளர் அலுவலகம் அமைக்க கோரிக்கை
திருப்பூர், டிச. 23 - திருப்பூர் சின்னியகவுண்டன்புதூரில் புதிய உதவி மின் பொறியாளர் அலுவலகம் அமைக்க மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் பாசன விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளரிடம், மேற்கண்ட பாசன விவசாயிகள் சங்கத் தின் தலைவர் சி.பொன்னுசாமி வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வீரபாண்டி மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இடுவம்பாளையம் மற்றும் பெரியாண்டிபாளையம் ஆகிய இரு இடங்களில் உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த இரு அலுவலகங்களிலும் தலா 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதில், சின்னியகவுண்டன்புதூர், சின்னாண்டி பாளையம், குளத்துப்புதூர், குள்ளே கவுண்டன் புதூர், செந்தில் நகர், ராஜகணபதி நகர், லிட்டில் பிளவர் நகர் போன்ற ஊர்கள் சின்னிய கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்திற்கு அருகாமையில் உள்ளன. எனவே, அந்த துணை மின் நிலைய வளாகத்தில் தனி உதவி மின் பொறி யாளர் அலுவலகம் அமைத்து மேற்கண்ட ஊர்களைச் சேர்ந்த மின் இணைப்புகளை அங்கு சேர்க்க வேண்டும். இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் வெகு தொலைவில் உள்ள இடுவம்பாளையம் அலுவலகத்திற்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல் மங்கலம் அருகில் உள்ள அக்ரஹாரம் புதூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை, 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்லடம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, மங்கலம் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாகன திருட்டு: ஒருவர் கைது
திருப்பூர், டிச. 23 - தாராபுரம் உட்கோட்டம் மூலனூரில் விவசாயிகள் இருவரது டிவிஎஸ் எக்ஸ்.எல் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக மூலனூர் காவல் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். மூலனூர் புதுக்காடு தோட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (67) தனது இரு சக்கர வாகனத்தை வடுகபட்டி ரோட்டில் உள்ள கோழிக்கடை முன்பாக நிறுத்தி இருந்தபோது திருடி செல்லப்பட்டது. அதேபோல் வயக்காடு தோட்டம் பகுதியில் வசித்து வரும் வடிவேல் (61) என்பவர் மூலனூர் பேருந்து நிறுத்தம் அருகே ஏடிஎம் சென்று திரும்பியபோது அவரது இரு சக்கர வாகனம் திருடப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, தேனி மாவட்டம் புத்தினாபுரத்தைச் சேர்ந்த பொன் முத்து பாஸ்கர் (36) என்பவரை கைது செய்து இரண்டு டி வி எஸ் எக்ஸ் எல் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சிறுபான்மை மக்கள் உரிமை நாளை புறக்கணிப்பதா?: ஆட்சியர் செயலுக்கு எதிர்ப்பு
ஈரோடு, டிச.23- சிறுபான்மை மக்கள் உரிமை நாளை புறக்கணிக்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் ஈரோடு மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி, செயலா ளர் ப.மாரிமுத்து ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் நாள் “சர்வதேச சிறுபான்மை மக்கள் உரிமை நாளாக கடை பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு, மாவட்ட ஆட் சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில், சிறுபான்மை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங் கப்படும். அத்துடன் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை, வாழ்வுரிமை, கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளைக் கேட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படுவது வாடிக்கையான ஒன்றாகும். ஆனால், ஈரோடு மாவட் டத்தில், சிறுபான்மை மக்கள் அமைப்புகளுக்கு இந்நிகழ்ச்சிக் கான அழைப்பிதழ் அனுப்பப்பட வில்லை. கூட்டம் நடத்தப்பட வும் இல்லை. கடந்த ஆண்டும் சர்வதேச சிறுபான்மை மக்கள் உரிமை நாள் கூட்டம் 18 ஆம்தேதி நடத்தாமல், சில நாட்கள் கழித்து தனியார் இடத்தில் பெயரளவிற்கு நடத்தப்பட்டது. அதிலும், மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள வில்லை. இந்நிலையில், சிறுபான்மை மக்களின் சர்வதேச உரிமை நாள் கூட்டத்தை இந்த ஆண்டும் நடத்தாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளனர்.
லாரி - கார் மோதி விபத்து: 4 பேர் பலி கோவிலுக்கு சென்று திரும்புகையில் பரிதாபம்
சேலம், டிச.23- ஆத்தூர் அருகே லாரி – கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தைச் சேர்ந்த பால் முத்துபிரபு (39) மற்றும் அவரது சகோதரியும், திருவேங்க டம் அருகே உள்ள சம்பாகுளத்தைச் சேர்ந்த சற்குண பாண்டியனின் மனைவி சுதா சற்குணலில்லி (37) குடும்பதி னரும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் தங்க ளது ஊருக்கு புறப்பட்டனர். காரை பால் முத்துபிரபு ஓட்டி சென்றுள்ளார். இதனிடையே சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பழையகாயலை அடுத்த புல்லாவெளி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி எதிர் பாராதவிதமாக காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பால் முத்துபிரபு, சுதா சற்குணலில்லி, சற்குணபாண்டியனின் தாயார் தமிழ்செல்வி (63) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். மேலும், அந்தோணி முத்துராஜ் என்பவரின் மனைவி பாண்டியம்மாள் தேவி (62) உள்ளிட்ட 7 பேர் படுகாயத்து டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாண்டி யம்மாள் தேவி வெள்ளியன்று காலை உயிரிழந்தார். இத னால் விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
படுகர் இன மக்களின் புது வருடம்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்
உதகை, டிச.23- நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் புது வருடம் சனியன்று (இன்று) பிறக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படு கர் இன மக்களின் புது வருடம் சனியன்று (இன்று) பிறக்கிறது. அதாவது படுகர் காலக்கணக்குப்படி கூடலு முதல் நாள் சனியன்று பிறக்கிறது. இதுவே படுகர்க ளின் புது வருடமாகும். இந்நிலையில், இந்த நாட்காட்டி படுகர் நல சங்கங்களின் தலைவர்கள் முன்னிலையில் வெள்ளி யன்று வெளியிடப்பட்டது. அப்போது சமுதாய தலைவர்கள் தங்களது புது வருட வாழ்த்துக்களை ஒருவருக்கொ ருவர் தெரிவித்துக் கொண்டனர். மேலும் நெலிகோலு அறக்கட்டளை யின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. இதுகுறித்து படுகர் சமூக நிர்வாகி கள் கூறுகையில், உலகின் மற்ற எல்லா இனங்களுக்கும் உள்ளதுபோல் படுக சமுதாயத்திற்கு தனியான ஒரு காலக் கணக்கு உள்ளதை நெலிகோலு அறக் கட்டளை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி உள்ளது. படுகர் காலக் கணக்கு சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. எனவே, மாதத் திற்கு 29 மற்றும் 30 நாட்கள் என்று அமை யும். சந்திரன் அடிப்படையில் அமைந்த படுகர் நாட்காட்டியை சூரியனை அடிப் படையாகக் கொண்ட ஆங்கில நாட்காட் டியுடன் ஒப்பிடும்போது, வருடத்திற்கு 10 நாட்கள் குறைந்து வருவதனால் 3 வருடங்களுக்கு ஒரு முறை குறை நாட் களை ஈடுகட்டுவதற்காக, அந்த வரு டம் 13 மாதங்களை கொண்டதாக அமை யும். இந்தமுறை படுகர் கணக்குப்படி ‘சரி 0பருச’ என்று குறிப்பிடப்படுகிறது. படுகர் காலக்கணக்குப்படி இந்த வரு டம் ‘அய்யந 0 பருச 1945’, இது ஒரு சரி வருடமாகும். எனவே, இது 13 மாதங்க ளைக் கொண்ட வருடமாக அமையும், என்றனர்.
பெயர் மாற்றும் முகாம்
ஈரோடு, டிச.23- பெருந்துறை கோட் டத்துக்கு உட்பட்ட மின் நுகர் வோருக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம் செயற்பொறி யாளர் அலுவலகத்தில் நடை பெற்றது. ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற முகாமில், மின் நுகர்வோர்களிடம் இருந்து மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பெயர் மாற்றங் களுக்கான 404விண்ணப் பங்கள் பெறப்பட்டன.