திருப்பூர், ஜன.2 - திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியி னர் வைத்திருந்த பேனரை போலீ சார் அகற்றச் சொன்ன சிறிது நேரத் தில், அதே இடத்தில் பாஜகவினர் பேனர் வைத்தனர். போலீசார் உடந் தையுடன் இந்த சம்பவம் நடைபெற் றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியி னர், பாஜக கட்சியினர் பரஸ்பரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற் றம் ஏற்பட்டு, பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. திருப்பூர் - தாராபுரம் சாலை, உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் சந்திப்பில் கடந்த சில நாட்கள் முன்பு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மதுரை யில் நடைபெறும் மாநாடு தொடர் பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் செவ்வா யன்று அந்த பேனரை அகற்றும்படி போலீசார் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் திடீர் என்று பேனர் அகற்றப்பட்ட அதே இடத்தில் பாஜக சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான பேனர் வைக்கப்பட் டது. காவல் துறை அனுமதி மறுத் திருந்தால் இரு தரப்புக்கும் அனுமதி மறுத்து இருக்க வேண்டும். ஆனால் பாஜகவினர் வைத்த பேனரை போலீ சார் கண்டும் காணாமல் இருந்தனர். இதைக்கண்ட எஸ்டிபிஐ கட்சியினர் பாஜக பேனரை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்திய நிலையில், பாஜகவின் பேனரை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். அதைத் ்தொடர்ந்து மீண்டும் எஸ்.டி.பி.ஐ கட் சியினர் சார்பில் அங்கு மீண்டும் பேனர் வைக்கப்பட்டது. உடனடி யாக பாஜகவினர் தங்கள் பேனரும் அதே இடத்தில் வைக்க வேண்டும் அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் சிடிசி கார்னர் பகுதியில் தங்கள் பேனரை வைப்போம் என பிரச்சனை செய்தனர். மேலும் பிளக்ஸ் பேனர் உடன் சி.டி.சி. கார்னர் வரை பேரணியாகச் சென்று பதற்றத்தை ஏற்படுத்தினர். இதன்பிறகு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, பாஜகவினர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதையடுத்து பாஜக வினரை போலீசார் கைது செய்தனர். மாநகர காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளின் பேனரும் உடன டியாக அகற்றப்பட்டது. போலீசார் தரப்பில் கூறுகையில், இரண்டு தரப் பினருக்கும் பேனர் வைக்க அனுமதி வழங்க வில்லை என்றும், அதனால் தான் தற்போது இந்த பேனர் அகற் றப்பட்டது எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் அசம்பா விதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறை பாரபட்சமின்றி சட்டத்தின்படி செயல்பட்டால் இந்த சர்ச்சையை, வீண் பதற்றத்தை தவிர்த்திருக்க முடி யும் என்று அப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.