ஈரோடு, பிப்.18- திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து தடை யால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தமி ழக-கர்நாடக இடையே சரக்கு போக் குவரத்துக்கு முக்கிய சாலையாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வ தற்கு இது முக்கியமான பாதை யாகும். அதனால் எப்போதும் இரு மாநில வாகனங்கள் வந்து சென்ற படி இருக்கும். அதேநேரம், திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி யில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, மான், குரங்கு உள்ளிட்ட வனவிலங் குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரி ழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தன. ஆகவே, இச்சா லையில் இரவு நேர போக்குவரத் திற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகன போக்கு வரத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத னால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன்பின் காலை 6 மணிக்கு மேல் அனைத்து வாக னங்களும் ஒரே நேரத்தில் செல்வ தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, புளிஞ்சூர் சோதனை சாவடியில் இருந்து பண்ணாரி வரை வழக்க மாக 40 நிமிடத்தில் கடந்து செல்லப் படும் நிலையில் தற்போது 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது.
இங் குள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும், கல்லூரிக ளுக்கும் பேருந்துகளில் தான் சென்று வருகிறார்கள். இச்சூழலில் கடந்த சில நாட்களாக குறித்த நேரத்துக்கு பேருந்துகள் வராமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதால் மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் பெரும் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் நாள்தோறும் தாள வாடியில் மலை கிராமங்களில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காய் கறிகளை வேனில் கொண்டு வரு கிறார்கள். போக்குவரத்து நெரிச லில் காய்கறி வேன்கள் மாட்டிக் கொள்வதால் சரியான நேரத் துக்கு மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல முடியால் வியாபா ரிகளும், விவசாயிகளும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு உடனே இப்பிரச்சி னையில் தலையிட்டு திம்பம் மலைப் பாதையில் இரவு நேரத்திலும் வாக னங்கள் செல்ல அனுமதிக்க வேண் டும் என்று வாகன ஓட்டிகள், அப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.