districts

img

கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி  தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

திருப்பூர், ஜன.17 - தெரு நாய்களால் உயிரிழந்த கால்நடை களுக்கு இழப்பீடு கோரி தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டத் தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வெறி நாய்களால்  கால்நடைகளை இழந்த விவசாயிகள் ஒருங் கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளகோ விலில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: வெறி நாய்கள் கடித்து  இறந்த கால்நடைகளுக்கு 50 தினங்களுக் குள் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என திருப் பூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் காங்கேயம் வட்டாட்சியர் கடிதம் மூலம் உறுதிமொழி கொடுத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  விவசாயிகள் பல கட்ட போராட்டங்க ளைக் கடந்து வந்தும், தெரு நாய்களுக்கு  கால்நடைகளை பலி கொடுத்து, வாழ்வாதா ரத்தை இழந்த குடும்பங்கள் வீதிக்கு வரு வது தொடர் நிகழ்வாக உள்ளது. எனவே  பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புத் தொடர் பான பட்டியலுடன் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து மீண்டும் முறையிடுவது, ஜனவரி 26 ஆம் தேதி கிராம  சபைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து  கிராம ஊராட்சிகளிலும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தி, கால்நடைக ளுடன் கிராம சபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. கடந்த முறை, 17  ஊராட்சிகளில் தெரு நாய்களை அகற்றவும்,  இழப்பீடு கோரியும், நிறைவேற்றப்பட்ட கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்  என கேட்பது. ஏற்கனவே இறந்த கால்நடைக ளின் உடற்கூராய்வு நகல் மற்றும் 45 நாட்களில்  இழப்பீடு கொடுக்கப்படும் என்ற கடிதத்தின் நகல் இரண்டையும் விவசாயிகள் எடுத்துச் செல்ல வேண்டும். இன்னும் இரண்டு தாலுகாக்களிலும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அடுத்த  கட்டமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கானேர் பங்கேற்று தொடர் உண்ணாவிரதம் இருப்ப தாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களால் ஆடுகள் தாக்கப்பட் டாலோ, இறந்தாலோ அவைகளை எடுத்துக்  கொண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திரளாகக் குடியேறும் போராட் டம் முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப் பட்டது. மேலும் மாவட்ட அளவில் பாதிக்கப் பட்ட கிராம ஊராட்சிகளில் பொறுப்பாளர் களை நியமித்து, அவர்கள் மூலம் பிரச்ச னைக்கு தீர்வுகாண மிகப்பெரிய உள் கட்ட மைப்பை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட் டது. மேலும் இத்தகைய கோரச் சம்பவங்கள்  நடைபெற்றால் மாவட்ட அளவில் நடைபெ றும் அமைதிப் பேச்சுவார்த்தையில் பிராணி கள் வதை தடுப்புச் சங்க நிர்வாகிகளையும் சேர்த்துக் கொள்ளவும் அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற முன்னெடுப்புகளைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டது.