ஹன்னன் முல்லா பேச்சு கோவை, நவ.4- விவசாயிகளுக்கு விரோதமான நடவ டிக்கையை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை வரும் காலத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலுவோடு முன்னெடுக்க உள்ளதாக அகில இந்திய விவசாய சங்கத்தின் துணை தலை வர் ஹன்னன் முல்லா தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயகிள் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக்குழு கூட்டம் கோவை சூலூ ரில் நடைபெற்றது. இதனையொட்டி, மாநிலக் குழு தீர்மானங்களை விளக்கி பொதுக்கூட் டம் சூலூர் அண்ணா சீரணி கலையரங் கத்தில் நடைபெற்றது. முன்னதாக பொதுக் கூட்டத்திற்கு, தவிச கோவை மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜே.ரவீந்திரன் வரவேற்றார். இப்பொதுக்கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா, கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம், செயலாளர் சாமி.நடரா ஜன், பொருளாளர் பெருமாள் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்நிகழ்வில், ஹன்னன் முல்லா பேசு கையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் கடன் சுமை மற்றும் விவ சாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற் கொலை செய்து கொண்டுள்ளனர். இயற்கை பேரிடர் காரணமாக விவசாயம் விளைச்சல் பாதிக்கும்போது அதற்கு உரிய நஷ்ட ஈடு ஒன் றிய அரசு தருவதில்லை. மேலும், விளை பொருள்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையும் வழங்குவதில்லை. எட்டு வழிச் சாலை போன்ற திட்டங்களுக்காக வலுக் கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து விளை நிலங்கள் பறிக்கப்படுகின்றன. பாஜக ஆட்சியில் அம்பானிக்கும், அதா னிக்கும் விவசாயிகளை அடிமைகளாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படு கிறது.
500க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தி னர் இணைந்து 750 உயிர்களை தியாகம் செய்து வேளாண் திருத்த சட்டங்களை தடுத்து நிறுத்தி உள்ளோம். தொடர்ந்து ஒன்றிய அர சின் வேளாண் விரோத செயல்களை கண் டித்து தொடர் போராட்டங்களை வலுவோடு முன்னெடுக்க உள்ளோம், என்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் பேசுகையில், பாரதியார் பல் கலைக்கழக நில எடுப்பு விவகாரத்தில் இது வரை நல்ல முடிவு எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. போதுமான அவகாசங்கள் கொடுக்கப்பட்டும் மீதி உள்ள நிலத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பல்கலைக்கழக விவகாரத்தில் டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் ஒரு தீர்வு எடுக்கப்படாவிட்டால் மிகப்பெரிய போராட் டத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கொள்ள உள்ளோம், என்றார். மேலும் அவர் பேசுகையில், வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமி ழகத் தெருக்களில் சுற்றி வருகிறார்கள். அமித் ஷாவின் மகன் 2014ஆம் ஆண்டு ரூ.50 ஆயி ரம் மட்டுமே வருமானம் என வருமான வரித் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, தற்போது ஆயிரம் மடங்கு சொத்து சேர்த்திருக்கிறார். இதுகுறித்து வருமானவரித்துறை கேட்கா மல், இங்கு சோதனை நடத்திக்கொண்டிருக் கிறார்கள், என்றார்.