districts

img

உண்டு உறைவிட பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

உதகை, மார்ச் 15- இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் போராட்ட எதிரொலியாக, ஏழாண்டுகள் மூடப்பட்ட கிடந்த உண்டு உறைவிட பள்ளிக்கான சாலை மற்றும் சுற்றுசுவர் அமைக் கும் பணி துவங்கியது. வரும் கல்வி யாண்டு முதல் புதிய கட்டடம் செயல் படும் என பொதுமக்கள் எதிர் பார்த்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி யின மாணவர்களின் கல்வி மேம் பாட்டிற்காக மாவட்டம் முழுவதும் 1952 முதல் 1962க்குள் அரசு பழங் குடியினர் உண்டு உறைவிட பள்ளி கள் தொடங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 பழங்குடி யினர் உண்டு உறைவிட ஆரம்ப  பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள், 3 உயர்நிலைப் பள்ளிகள், 2 மேல் நிலைப் பள்ளிகளும் செயல்படு கின்றன. இந்த பள்ளிகளில் பல பழங்குடியின கிராமங்களிலிருந்து மாணவர்கள் பாடம் பயின்று வரு கின்றனர். அந்தப் பள்ளிகளில் பழ மையானது முதன்மையானதும் தேவாலா பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியா கும்.  கூடலூர் வட்டம், தேவாலா கிரா மத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் இப் பள்ளி, ஓலை குடிசையில் தொடங் கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு சில மாணவர்களே இங்கு பாடம் பயின்று வந்தனர். நாளடைவில் பள்ளியா னது வளர்ச்சி பெற்று சொந்த கட்டி டத்தில் தொடங்கப்பட்டது. பின் னர், தேவாலா முதல் பந்தலூர் செல் லும் சாலையில், அரசு நிலத்தில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி  பள்ளியின் தரத்தை உயர்த்துவ தற்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத் தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு, நீதி மன்றமும் பள்ளிக்கான இடம் என தீர்ப்பளித்தது.  2016 ஆம் ஆண்டு பள்ளிக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து தமிழக அர சால் கட்டப்பட்டது. ஆனால், மாண வர்களின் நலனுக்காக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் ஏழாண்டுகள் கடந்த பின்னும் இன்றளவும் திறக்கப்பட வில்லை. தற்போது, புதிய கட்டி டத்தை சுற்றியும் புதர் மண்டி கிடைக் கின்றன. இந்நிலையில், பழங்குடி யின மாணவர்களின் மேம்பாட் டிற்கு கல்வி மிக அவசியமான ஒன்று என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர்ந்து போராட் டங்களை முன்னெடுத்தனர். இப் போராட்டத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என பலரும் ஆதரவளித்தனர்.  இந்நிலையில், இந்திய ஜன நாய வாலிபர் சங்கத்தின் போராட் டத்தின் எதிரொலியாக, வெள்ளி யன்று சாலை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட் டுள்ளன. வரும் கல்வியாண்டு முதல் பள்ளியானது புதிய கட்டிடத்தில் இயங்கும் என தகவல் வெளியாகி யுள்ளது. இதனால், தேவாலா பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.