மேட்டுப்பாளையம், ஜன.29- மேட்டுப்பாளையம் அடுத் துள்ள விளாமரத்தூர் என்னுமிடத் தில் இருந்து பில்லூர் அணை வரை புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதால், மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடி யின மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையை சுற்றி 20 திற்கும் மேற் பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங் களை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீரை தேக்கி வைக்க அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் பில் லூர் அணை கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் விளாமரத்தூர் - பில் லூர் அணை இடையே போக்கு வரத்து வசதிக்காக சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு கற்களால் ஆன தற்காலிக சாலை அமைக்கப் பட்டது. வனம் சார்ந்த பகுதி என்ப தால் இதன் பின்னர் இந்த சாலை பராமரிப்பின்றி முற்றிலும் சேதம டைந்து பொது மக்கள் யாரும் பயன்படுத்த இயலாத நிலை ஏற் பட்டது. மேலும், இப்பாதை வனத் துறையினரின் கட்டுப்பாட்டிற்கு சென்றதால் அனுமதியின்றி யாரும் இதில் பயணிக்காதவாறு இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டது. இத னால் பில்லூர் அணையை சுற்றி யுள்ள பழங்குடியின கிராம மக்கள் தங்களது விவசாய விளைப் பொருட் கள் விற்பனை, மருத்துவம் மற்றும் தங்களின் அனைத்து தேவைகளுக் கும் விளாமரத்தூர் வழியே சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் போன்ற நகர பகுதிகளுக்கு வந்து செல்ல தற் போது சுமார் 59 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டியுள் ளது. இதனால் இச்சாலையை சீர்ப டுத்தி போக்குவரத்திற்கு வசதியாக தார் சாலையாக மேம்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பழங்குடியின மக்களின் கோரிக்கையினை ஏற்று இச்சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன. முதற்கட்டமாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 8 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய சாலை அமைக்கும் பணி துவங்கி யுள்ளது. இதனால் பில்லூர் அணையை சுற்றியுள்ள மலைக் கிராம மக்கள் தங்களது 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளதாக மகிழ்ச்சியடைந்துள் ளனர்.