திருப்பூரில் கன்ஸ்ட்ரோ மெகா 2023 தொடங்கியது
திருப்பூரில் கன்ஸ்ட்ரோ மெகா 2023 தொடங்கியது திருப்பூர் வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் மாநில தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் திறந்து வைத்தார். பொறியி யல் பொக்கிஷம் 2023 என்ற கண்காட்சி மலரை திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன் வெளியிட, மேயர் ந.தினேஷ்குமார் பெற்றுக் கொண்டார். அதேபோல் திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் கைபேசி செயலியை மேயர் ந.தினேஷ்குமார் வெளியிட்டார். இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு சங்கத் தலைவர் எஸ்.ஜெயராமன் தலைமை ஏற்றார். செயலாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்றார். விழா அறிக்கையை கண்காட் சித் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் முன்வைத்தார். துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணி யம், தமிழ்நாடு பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்கள் சங்கக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் டி.ராஜேஷ், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.விஜயாபானு உள்ளிட்டோர் பங் கேற்று வாழ்த்தினர். இக்கண்காட்சி ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 200 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. கட்டுமானத் தொழில் நுட்பங்கள், கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து பொருட்கள் இடம் பெற்றுள்ளன. தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படு கின்றன. தொடக்க விழா நிறைவாக கண்காட்சிச் செயலர் எஸ்.ராஜசேகரன் நன்றி கூறி னார்.
திருப்பூரில் கன்ஸ்ட்ரோ மெகா 2023 தொடங்கியது திருப்பூர் வித்யா கார்த்தி திருமண மண்டபத்தில் மாநில தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் திறந்து வைத்தார். பொறியி யல் பொக்கிஷம் 2023 என்ற கண்காட்சி மலரை திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன் வெளியிட, மேயர் ந.தினேஷ்குமார் பெற்றுக் கொண்டார். அதேபோல் திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் கைபேசி செயலியை மேயர் ந.தினேஷ்குமார் வெளியிட்டார். இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு சங்கத் தலைவர் எஸ்.ஜெயராமன் தலைமை ஏற்றார். செயலாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்றார். விழா அறிக்கையை கண்காட் சித் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் முன்வைத்தார். துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணி யம், தமிழ்நாடு பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்கள் சங்கக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் டி.ராஜேஷ், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.விஜயாபானு உள்ளிட்டோர் பங் கேற்று வாழ்த்தினர். இக்கண்காட்சி ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 200 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. கட்டுமானத் தொழில் நுட்பங்கள், கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து பொருட்கள் இடம் பெற்றுள்ளன. தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படு கின்றன. தொடக்க விழா நிறைவாக கண்காட்சிச் செயலர் எஸ்.ராஜசேகரன் நன்றி கூறி னார்.
சிறு தொழில்களே ஆதாரம்
இந்த விழாவில் வாழ்த்திப் பேசிய திருப் பூர் தொகுதி எம்.பி. கே.சுப்பராயன் கூறும் போது, இன்றைய அரசியல் நிலை, பொருளா தாரக் கட்டமைப்பில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நசிந்து வருகின்றன. கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள் கைகளை ஒன்றிய அரசு பின்பற்றுவதால் தான் இந்த நிலை. திருப்பூரில் பல இடங்க ளில் வாடகைக்கு ஆள் வராத நிலையில் கட்டி டங்கள் உள்ளன. வாடகைத் தொகையை குறித்த காலத்தில் கேட்டு வாங்கக் கூடிய சூழ் நிலையும் இல்லை. திருப்பூரில் 40 சதவி கிதம் சிறு தொழில்கள் அழிந்துவிட்டன. சில ருக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. சிறு தொழில்கள் நலிந்தால் கட்டுமானத் தொழிலும் நலிவடையும். இதை கவனத்தில் கொண்டு கட்டுமானத் தொழில் துறையினர் செயல்பட வேண்டும், என்றார்.
சாமானியர் கனவை நிறைவேற்றுக!
இவ்விழாவில் கைபேசி செயலியை வெளியிட்டு மேயர் ந.தினேஷ்குமார் பேசு கையில் கூறியதாவது: சாமானிய மக்களின் வீடு என்ற கனவை பொறியாளர்கள் நிறை வேற்ற வேண்டும். எளிய, புதிய முறையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் கட்டி டங்கள் கட்டப்பட வேண்டும். கட்டுமானத் துறையினருக்கு ஒரு கோரிக்கை. கட்டு மான நிறைவுச் சான்றிதழ் பெறுவதற்கு விண் ணப்பித்து 5000-க்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் நிலுவையில் இருக்கின்றன. எனவே வரையறுக்கப்பட்ட கட்டுமான வரைப டத்தின்படி கட்டிடங்கள் கட்டுவதை பொறி யாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வரைப டத்தில் உள்ளபடி இல்லாமல் விதி மீறி கட்டப் படும் கட்டிடங்களுக்கு கட்டுமான நிறைவுச் சான்றிதழ் பெற முடியாது. இதை கவனத்தில் கொண்டு பொறியாளர்கள் செயல்பட வேண் டும். அதேபோல் திருப்பூரில் இரண்டு வார்டு களை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்து பார்த்த போது, வரி விதிப்பில் 309 சதவிகிதம் வித்தி யாசம் இருந்தது. அதாவது 309 சதவிகிதம் வரி வசூலிக்க வேண்டியதற்கு 100 சதவிகிதம் வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச் சிக்கு சரியான வரி விதிக்கப்பட்டு வரி செலுத் தினால்தான் அனைவருக்கும் உள்கட்ட மைப்பை மேம்படுத்த முடியும். இவ்வாறு மேயர் தினேஷ்குமார் கூறினார்.