திருப்பூர், நவ.23- பாரதிய ஜனதா அரசின் கொள்கைக ளால் திருப்பூர் வெகுவாக பாதிக்கப்பt டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள் ளார். திருப்பூரில் வியாழனன்று செய்தி யாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியதாவது, ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைக ளால் திருப்பூர் பெருமளவு பாதித்துள் ளது. வங்க தேசத்தில் இருந்து ஆடை இறக்குமதிக்கு வரி விலக்கு உள்ள தால், இந்திய ஆடை உற்பத்தி பாதித் துள்ளது. சீனாவில் இருந்து வரும் பாலி யஸ்டர் துணிக்கும் இதே நிலைதான். ஒரு சிலரிடம் மட்டுமே இந்த துணி தயா ரிக்கும் உரிமம் உள்ளது. மற்றவர்க ளுக்கு இந்த வாய்ப்பை மத்திய அரசு வழங்கவில்லை. சீனாவில் இருந்து வரும் பாலியஸ்டர் துணி மலிவான விலைக்கு கிடைப்பதால். உள்நாட்டு துணி உற்பத்தி குறைகிறது. சுதந்திரத்திற்கு முன்பே இந்து சமய அறநிலையத் துறை அரசிடம் தான் உள்ளது. மன்னர்கள் காலத்தில்கூட கோவில் நிர்வாகம் மன்னர்கள் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. ஆதிக்க எண் ணம் கொண்ட மனிதர்கள் கட்டுப்பாட் டில் கோவில்கள் சென்றுவிட்டால் பிறர் சென்று கோவிலில் வழிபட முடியாது. எனவே கோவில்கள் அரசின் கட்டுப் பாட்டில் இருப்பதுதான் நல்லது. திமுக அமைச்சர் சேகர்பாபு ஏற்றுக்கொண்ட பொறுப்பை திறம்பட செய்கிறார். ரூ.5 ஆயிரம் கோடி கோவில் சொத்துக்களை மீட்டுள்ளார். மதத்தின் பெயரால் வட மாநிலங்க ளில் பாஜக அரசியல் செய்வதை போல தமிழகத்திலும் செய்ய நினைக்கின்ற னர். கர்நாடகாவில் உள்ள பாஜகவினர் அங்கு தண்ணீர் திறந்தால் போராட்டம் நடத்தி உணர்வைத் தூண்டி விடுகின்ற னர். என்றாலும் தண்ணீர் வந்து கொண்டு தான் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக அரசின் பக்கம் நிற்கிறது. கர்நாட காவில் காங்கிரஸ் கட்சியினர் எதிராக பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித் துள்ளேன். ஆனால் பாஜகவினர் குறித்து அண்ணாமலை வாய் திறக்கா மல் அரசியல் செய்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்யவதில்லை. மற்ற மாநிலங்களில் மட்டும் சோதனை செய்வது அவர்களின் மலிவான அரசி யல் நடவடிக்கை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்று அழகிரி தெரி வித்தார்.