districts

img

வெல்லத்தில் கலப்படம் செய்ய இருந்த சர்க்கரை மூட்டைகள் பறிமுதல்

சேலம், ஜன.3- ஓமலூர் அருகே வெல்லத்தில் கலப்படம் செய் வதற்காக வைக்கப்பட்டிருந்த சர்க்கரை மூட்டை களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறி முதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள  காமலாபுரம் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஆர்.கதிரவன் தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள், வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, எல்லப்புளி பகுதி யில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பாலையில் ரூ.1.26 லட்சம் மதிப்பிலான 50  கிலோ எடை கொண்ட 63 வெள்ளை சர்க்கரை  மூட்டைகள் வெல்லத்தில் கலப்படம் செய்வதற் காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, பறி முதல் செய்யப்பட்டது. மேலும், அந்த ஆலையில் இருந்த ரூ.46 ஆயிரத்து 800 மதிப்பிலான 1080  கிலோ கிராம் வெல்லமும் பறிமுதல் செய்யப் பட்டது. அவற்றிலிருந்து உணவு மாதிரிகள் எடுக் கப்பட்டு, பகுப்பாய்விற்காக திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரிடம் அதிகா ரிகள் விசாரணை மேற்கொண்டதில், வெல்லத்தில் கலப்பதற்காக வாங்கப்பட்ட வெள்ளை சர்க்கரை  மூட்டைகள், காமலாபுரம் பிரிவில் உள்ள சன் டிரே டர்ஸ் நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வாங் கியதாக வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படை யில் சன் டிரேடர்ஸ் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, ரூ.16 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கிராம் எடை கொண்ட 800 வெள்ளை சர்க்கரை மூட் டைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட் டது. தொடர்ந்து, அதனருகில் செயல்பட்டு வந்த  சாய் சக்தி நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு  செய்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கிராம் எடை கொண்ட 250 வெள்ளை சர்க்கரை மூட்டை கள் பறிமுதல் செய்தனர். இரண்டு நிறுவனங்களி லும் அதன் கொள்முதல் விவரம் மற்றும் விற்பனை விபரம் ஆகியவைகள் சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையிலும், உணவு பகுப்பாய்வு முடிவின் அடிப்படையிலும் மேல் நடவடிக்கை தொடரப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நிய மன அலுவலர் ஆர்.கதிரவன் தெரிவித்துள்ளார்.