கோவை, மே 18- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை கிழக்கு நகரக்குழுவின் மாநாடு செவ்வாயன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு நகர தலைவர் ஆர்.வனஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, சிபிஎம் கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வ ராஜ், நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த மாநாட்டில் பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவ டிக்கையை மேற்கொள்ள வேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். பல ஆண்டுகாலம் குடியிருந்து வரும் மசால் லே அவுட் பகுதிகுடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா உடன டியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் தலைவராக பூங்கொடி, செயலாளராக சங்கவி, பொருளாளராக தீபா உள்ளிட்ட 13 பேர் கொண்ட கிழக்கு நகர் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் சுதா உரையாற்றினார்.