districts

img

நீட், கியூட் தேர்வுகளை ரத்து செய்க

கோவை, பிப்.10- நீட்,கியூட் தேர்வுகளை நீக்க வும், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனு மதிக்கக் கூடாது என கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு வலியு றுத்தி உள்ளது. கல்வி உரிமைக்கான கூட்ட மைப்பின் சார்பில் கோவை- பீள மேடு புதூரில் புதனன்று கருத்த ரங்கம் நடைபெற்றது. மாணவர்கள்  கல்வி உரிமைக்கான கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் வி.தெய் வேந்திரன் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கத்தில், மேக நாதன் வரவேற்றார். இந்திய  ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன், அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்க கோவை மாவட்ட செய லாளர் டி.சுதா, மாவட்ட  தலைவர் ஜோதிமணி,  பேராசிரியர் காம ராஜர் ஆகியோர் கருத்துரையாற் றினர்.

நிகழ்ச்சியில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகை யில், நீட், கியூட் தேர்வுகளில் இருந்து விலக்கு கேட்கிற கோரிக்கை கூட்டங்களை, போராட் டங்களை நாம் நடத்தவில்லை, அது  மாநில அரசுகளுக்கு உண்டான உரிமை. நாம் உரிமையை பெறு கிற போராட்டமே நடத்துகிறோம் என தெரிவித்தார்.  ஒன்றிய மோடி அரசுக்கு நீட்  தேர்வு குறித்து,  ரஞ்சீத் ராய் கமிட்டி யின் அறிக்கை  மற்றும் 92 ஆவது  நாடாளுமன்ற நிலைக்குழு பரிந் துரைகள் குறித்த ஆய்வறிக்கை யில் கூறியுள்ள விபரங்களை அம லாக்குமாறு, தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நீட் தேர்வுக்கு ஆதரவாக இருப் பது  மோடி அரசு தான்.  தமிழ் நாட்டில் உள்ள பாஜகவினர் நீட்  தேர்விற்கு விலக்கு பெற உச்சநீதி  மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தான் உரிமை பெற வேண்டும் என்று கூறுவது நம்மை ஏமாற்று வதாகும். மேலும், தனியார் கல்வி  நிறுவனங்கள் நீட், கியூட் தேர்வு களுக்காக ரூ.60 லட்சம் முதல்  ஒன்னறை கோடிவரை கொள்ளை யடிக்கிறது என்றார். இக்கருத்த ரங்கில் திரளானோர் கலந்து கொண் டனர். பொள்ளாச்சி இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மீது தாக்கு தல் தொடுக்கும் ஒன்றிய அரசின்  நடவடிக்கைகளை கண்டித்து, மாணவர்களின் கல்வி உரிமைக் கான கூட்டமைப்பின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக, சிபிஎம், சிபிஐ,  காங்கிரஸ், மதிமுக, விசிக உள் ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.