சேலம், பிப்.20- தோழர் ஆறுமுகம் அவர்களின் இரங்கல் கூட்டம், சேலம் ஏபிடி பார்சல் சர்வீஸ் நுழைவு வாயிலில் வியாழனன்று நடைபெற்றது. ஏபிடி தொழிற்சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ஆறுமுகம் ஞாயிறன்று காலமானார். இதையடுத்து சேலம் ஏபிடி பார்சல் சர்வீஸ் கிளை அலுவலக நுழைவாயிலில் வியாழனன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. செந்தில் குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவித்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் பனமரத் துப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சுரேஷ், ஏபிடி சங்க பொருளாளர் செவந்தியப்பன், சேலம் கிளைத் தலைவர் கே. கோவிந்தன், செயலாளர் ஜெயசுந்தர், பொருளாளர் பன்னீர் செல்வம், மூத்த தலைவர் பி.இராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.