districts

img

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவிற்கு கண்டனம்

தருமபுரி, மார்ச் 13- மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும், தமிழக பெண்களையும் இழிவாக பேசிய பாஜக நிர்வாகி குஷ்பு விற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டத்தில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும், தமி ழக பெண்களையும் இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வா கியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான  குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்து திமுக மகளிரணி  சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங் கம் பெ.சுப்ரமணி தலைமையில், மகளிர் அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துலட்சுமி முன்னிலையில் குஷ்புவின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடை பெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், மேற்கு மாவட்ட  மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மோகன், தலைவர் மேகலா, அமைப்பாளர்கள் கவிதா, ஜெயா உட்பட பலர்  கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மகளிரணி நிர்வாகி யும், மாமன்ற உறுப்பினருமான மஞ்சுளா தலைமை வகித்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, பாஜக நிர்வாகி குஷ்புவின் புகைப்படத்தை தீயிலிட்டு கொளுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.