நாமக்கல், ஆக.20- குமாரபாளையம் கிளை நூலகத்தில் விடியல் ஆரம் பம் பவுண்டேஷன் சார்பாக 15 நாட்கள் தொழில் சார் பயிற்சி சான்றிதழ் வழங்கியும், மறைந்த பொதுவுடமை போராளி தோழர் ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள் விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதி கிளை நூலகத்தில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக 15 நாட்கள் தொழில் சார் பயிற்சி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி மாணவர்கள் விழா மற்றும் சுதந்திர போராட்ட தியாகியும், பொதுவுடமைப்போராளியுமான மறைந்த தோழர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா நிகழ்வு நடைபெற்றது. கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் மற் றும் விடியல் பிரகாஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பஞ்சாலை சண்முகம் முன்னிலை வகித்தார். இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரேணுகா ஜீவா குறித்து உரையாற்றினார். இதனையடுத்து, 15 நாட்கள் தொழில் சார் பயிற்சி பெற்ற 52 மாணவ மாணவிகளுக்கு கிளை நூலகர் மாரியாயி அவர்கள் பயிற்சி சான்றிதழ் வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முனைவர் ஞானதீபன் புத்தகங்கள் வழங்கினார். முடி வில் உதவி நூலகர் தீபா நன்றி கூறினார்.