districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

ஈரோடு, ஜூன் 4- மின்வாரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஈரோடு விபி.சிந்தன் நினைவகத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர்கள் எம்.ஆர்.பெரியசாமி மற்றும் கே.விஸ்வநாதன். இவர்கள் சிஐ டியுவுடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பில் இணைந்து செயல்பட்டனர். தொடர்ந்து அமைப்பின் ஈரோடு மின்பகிர்மான வட்ட தலைவராகவும், உதவி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயல் பட்டு வந்தனர். இந்நிலையில், மேற்கண்டவர்கள் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். பொருளாளர் கே.ஜெயக்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.இராஜேந்திரன், மாநிலச் செயலாளர் சி.ஜோதிமணி, மாநில துணைத்தலைவர் வி. இளங்கோ மற்றும் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர். ரகுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக உதவி செயலாளர் சி.சக்திவேல் நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சியில், பணி ஓய்வுபெற்ற எம்.ஆர்.பெரியசாமி, நிர்மல் பள்ளி நிதியாக ரூ.10 ஆயிரம், கட்சி நிதியாக ரூ.25 ஆயிரம், ஓய்வுபெற்றோர் நல அமைப்பிற்கு ரூ.50 ஆயிரம், மின்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.50 ஆயிரம் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் கட்டட நிதியாக ரூ.1 லட்சம் அளித்தார்.