districts

img

குடிநீர் திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்திடுக

சேலம், பிப்.6- நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கும்  வகையில், துவங்கப்பட்டுள்ள 4 கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பேசு கையில், சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 10 கூட்டுக்குடிநீர் திட்டங்களின் வாயிலாக 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4475 ஊரக குடியிருப்புகளுக்கு நாள்தோறும் சராசரி யாக 177 மில்லியன் லிட்டர் குடிநீர், 29.21 லட்சம்  மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் ரூ.652.84 கோடி மதிப்பீட்டில்  இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப் பட்டி, மல்லூர் ஆகிய 4 பேரூராட்சிகள், இடங்கண சாலை நகராட்சி மற்றும் வீரபாண்டி, பனமரத்துப் பட்டி, சேலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்ட ஒரு புதிய கூட் டுக்குடிநீர் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 53.23 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் 5.23 லட்சம்  மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப் பட்டு இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. மேலும், ரூ.30.58 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட் டத்தின் நீர் ஒதுக்கீட்டில் இருந்து ஒரு பகுதியாக சங்ககிரி பேரூராட்சிக்கு நாள்தோறும் 1.827 மில்லி யன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் 28 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. இதேபோன்று, ரூ.12.70 கோடி மதிப் பீட்டில் ஏற்காடு மற்றும் ஏற்காடு ஊராட்சிக்குட்பட்ட 8 குடியிருப்புகளுக்கான புதிய குடிநீர் திட்டம் 16  ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் தற்பொழுது முடிக்கப்பட்டுள்ளது.  மேலும், ரூ.342.41 கோடி மதிப்பீட்டில் ஊரக பகு திகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங் கப்படும் குடிநீர் அளவினை 40 லிட்டரில் இருந்து 55 லிட்டர் ஆக உயர்த்தி வழங்கும் வகையில், சேலம் மாவட்டத்தில் வாரிய பராமரிப்பிலுள்ள 5  கூட்டுக்குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய,  தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் எடுத் துக்கொள்ளப்பட்டு, அதில் ஒரு பணியான ராசி புரம், எடப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தற் பொழுது முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு  திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமென தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.  இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சீ.பாலச் சந்தர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியா ளர் ஜெயகோபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌ.தமிழரசி உள்ளிட்ட தொடர்புடைய அலு வலர்கள் கலந்து கொண்டனர்.