திருப்பூர் ஜூலை 12- 181 வகை பறவை இனங்களுக்கு வாழிடமாகவும்,வெளிநாட்டுப் பறவை கள் தங்கி செல்லும் இடமாகவும் இருக் கும். நஞ்சராயன் குளத்தில் தனியார் நிறு வனம் கட்டுமான பணிகளைச் செய்வ தாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழு புகார் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல் லாற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியான நஞ்சராயன் குளம் தமிழ் நாட்டின் 17 ஆவது பறவைகள் சரணால யமாகத் தமிழ்நாடு அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட் டுள்ளது. இக்குளத்தில் 181 பறவை இனங் கள்,40 வகை பட்டாம்பூச்சிகள்,76 வகை தாவரங்கள்,11 வகை நீர் வாழ் உயிரினங் கள் மற்றும் 16 வகை பூச்சி இனங்க ளுக்கு வாழிடமாகவும்,வெளிநாட்டுப் பறவைகள் வலசை பாதையில் தங்கிச் செல்லும் இடமாகவும்,800 ஆண்டுக ளுக்கு மேலாக இந்த குளம் இயங்கிவ ருகிறது.மேலும் 40ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது. இந்நிலையில் குளத்தின் கரை யில் இருந்து சாலை வரை ரூ.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலம் வெறும் ரூ.1.5 கோடி ரூபாய்க்குத் தனியார் அறக் கட்டளைக்குத் தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. அந் நிறுவனம் தற்போது குளக்கரையிலி ருந்து சாலை வரை நீர்வழிப் பாதை களை மறித்து கட்டுமான பணிகளைச் செய்து வருகிறது, எனவே சட்டப் போராட்டம் நடத்தி நிலத்தை மீட்டெ டுக்க வேண்டும் என நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.