ஈரோடு, அக்.11- சாதி ஆதிக்க திமிரோடு பட்டியலினத்தவரை மிரட்டுபவரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காவல் துறையில் புகாரளித்தனர். ஈரோடு மாவட்டம், நசியனூர் மேற்கு புதூரைச் சேர்ந்தவர் சரவண கவுண்டர். இவர் கூரபாளையம் பகுதியைச் சேர்ந்த மினி ஆட்டோ உரிமையாளரான ரங்கசாமியை திங்களன்று மாலை போன் மூலம் அழைத்துள்ளார். நேரில் சென்ற போது ஏன் காவல் துறைக்கு என்னைப் பற்றி புகார் தெரிவித்தாய் என தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். மேலும், அருந்ததி யரான ரங்கசாமியின் சாதியை இழிவாகச் சொல்லியும், கை கால்களை உடைத்து விடுவோன் என்றும் மிரட்டியுள்ளார். அதேபோல அவரது மனைவியையும், மகனையும் மிரட்டி யுள்ளார். இதுகுறித்து ரங்கசாமி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் சித்தோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டத் தலைவர் பி.பி.பழனிசாமி, சிபிஎம் தாலுக்கா செயலாளர் எம்.பாலசுப்பிரமணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா. லலிதா, விதொச தாலுக்கா தலைவர் எம்.நாச்சிமுத்து, தாலுக் காச் செயலாளர் என்.நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.