districts

img

ஈஷா-வின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து புகார்

கோவை, பிப்.6- ஈஷா மையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து, பேரூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரை இடதுசாரி இயக்க தலைவர்கள் மற்றும் பெரியார், அம்பேத்கர் இயக்க தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.எஸ்.கனகராஜ், ஆறுச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுதா, வி.மணி, உஷா, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்டத் துணை செயலாளர் ஜே.ஜேம்ஸ், மாவட்டப் பொருளாளர்  தங்க வேலு, வழக்கறிஞர் சக்திவேல், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டி ணன், தமிழ்நாடு திராவிடர் சுய மரியாதை கழக தலைவர் நேரு தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று மனு அளித்தனர். அதில், ஈஷா வளாகத்தின் அரு கில் உள்ள 44 ஏக்கர் அரசு உபரி நிலம் 1970 ஆம் ஆண்டுகளில் பட்டிய லின, பழங்குடியின மக்களுக்கும், முன்னாள் ராணுவ வீரரின் குடும் பத்திற்கும் என ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிலங்களை யாரும் விற்கக்கூடாது, வாங்கக்கூடாது. இந் நிலையில், ஈஷா நிறுவனம் பலரி டத்திலேயும் நிர்பந்தப்படுத்தி இந்த  நிலங்களை வாங்கி இருக்கிறார் கள். இதற்கு எதிராக பெரும் போராட் டங்கள் நடந்த பின்பு கோவை கோட்டாட்சியர் அவர்கள் முன்னி லையில் நடந்த விசாரணையில் 44 ஏக்கர் குறித்து முழுமையான விசா ரணை நடத்தி முடிக்கப்படாமல், அந்த நிலத்தை எந்த வகையான பயன்பாட்டுக்கும் கொண்டு வரக் கூடாது என உத்தரவிட்டார். ஆனால், ஈஷா நிர்வாகம் தொடர்ந்து அதை மீறி வருகிறது. அதை பார்வையிட செல்வதற்கே ஜனநாயக அமைப் பைச் சார்ந்தவர்களை அனுமதிப்ப தில்லை. ரவுடிகளை கொண்டு மிரட் டுகிற வேலையை செய்கிறார்கள். எனவே, 44 ஏக்கர் நிலத்தை அரசு உத்தரவின்படி விசாரணை முடிகிற வரை எந்தவிதமான பயன்பாட் டுக்கும் உட்படுத்தக்கூடாது. அதேபோன்று, ஈஷா மையம் மாநிலத்தில் எங்கேயும் இல்லாத அளவுக்கு ஒரு சிறு கிராம ஊராட் சிக்குள், உள்ளாட்சிக்கும் ஒப்ப டைக்காமல், அரசுத் துறையின் கண் காணிப்பும் இல்லாமல் மின் மயா னத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உரிய அனுமதி மற்றும் அரசுத் துறை தான் இந்த மயானத்தை செயல்படுத்த வேண்டும். அது வரை பயன்பாட்டுக்கு அனுமதிக் கக்கூடாது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று ஏராளமான வாகனங்கள் ஈசா வளாகத்துக்கு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கக்கூடிய பல்லுயிர்க ளும் இங்கு எழக்கூடிய ஒலி மாசு  காரணமாக பெரும் அச்சுறுத்த லுக்கு ஆட்படுகிறது. எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒலி மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஈஷா யோகா மையத் தின் கழிவு நீர் விவசாய நிலங்களை  பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. முறையாக சுத்திகரிப்பு செய்து மறு உபயோகத்திற்கு அவர்களை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு மாறாக விளைநிலங்க ளுக்குள் கழிவு நீரை கொண்டு சேர்ப்பது தடுத்து நிறுத்த வேண் டும். ஈஷா யோகா மையத்தைச் சுற்றி விவசாயம் செய்து வரக்கூடியவர் களை பெரும் தொகை கொடுக்கி றோம். உங்கள் நிலங்களை கொடுங் கள் என்று அச்சுறுத்தப்படுகிறார் கள். எந்த விதத்திலேயும் இதை அனுமதிக்க கூடாது. நிலத்தின் உரி மையாளர்கள் அச்சமின்றி விவசா யம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஈஷா யோகா மையத் தில் காணாமல் போனவர்கள் குறித் தும், தற்கொலை செய்து கொண்ட வர்கள் குறித்தும், சட்டவிரோதமாக  கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து, நீர் வழித்தடங்களை யானை வழித் தடங்களை மறித்தது குறித்து என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. ஆனால் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து, உயர்நீதிமன்றமும், உச்ச  நீதிமன்றமும் வழிகாட்டிய பின்பும் வழக்கு விசாரணையில் எந்த முன் னேற்றமும் ஏற்படாதது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, மேற் சொன்ன எங்களது  புகார்கள் குறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர்.