தருமபுரி, மே 24- தருமபுரிமாவட்டத்தில்விளை நிலங்க ளில் உயர் மின் கோபுரம் அமைத்த பிறகும் இழப்பீடு வழங்காதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், நரசிபுரம் வருவூரான் கொட்டாய் நாக மரத்து பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டையும், சத்தீஸ்கர் மாநி லத்தையும் இணைக்கும் ஒரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலை யில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்ட விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங் களை விவசாயிகள் நடத்தினர். இதனி டையே அரசு அதிகாரிகள் உயர் மின் கோபு ரம் அமைக்கப்பட்ட இடங்களை அளவீடு செய்து உரிய இழப்பீடு வழங்குவதாக விவ சாயிகளுக்கு உறுதியளித்தனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற் பட்ட விவசாயிகள் பென்னாகரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து பென்னா கரம் வட்டாட்சியர் அசோக்குமார் தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையில் காவல்துறை உதவி ஆய்வாளர் துரை, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட தலைவர் கே.என்.மகன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராசிபலன், பென்னாகரம் பகுதி கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்தி வேல், ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந் தம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சக் திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்தபேச்சுவார்த்தையின் முடிவில் 10 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வும், அதற்கான முகாம் ஒன்றை அப்பகுதி யில் நடத்துவதாகவும் வட்டாட்சியர் உறுதிய ளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். முன்னதாக, காத்திருப்பு போராட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், முத்து, சிசுபாலன், அர்ஜுனன், பென்னாக ரம் பகுதி செயலாளர் ரவி, ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர்.