districts

img

உயிரிழந்த தூய்மைக் காவலருக்கு இழப்பீடு வழங்கிடுக

அவிநாசி, ஜன.7- உயிரிழந்த தூய்மைக் காவலருக்கு இழப் பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை செய்து, உயிரிழந்த தூய்மைக் காவலர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தூய் மைக் காவலர்கள் அனைவருக்கும் நல  வாரிய அட்டை, பணிக்கொடை, ஓய்வூதியம்  வழங்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிச் சாமி, மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப் பினர்கள் வேலுச்சாமி, கனகராஜ் மற்றும் ஏரா ளமான தூய்மைக் காவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார வளர்ச்சி  அலுவலர் விஜயகுமாரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசினர். இக்கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றாவிட்டால், ஜன வரி மாத இறுதிக்குள் மறியல் போராட்டம் நடைபெறும், என போராட்டக்காரர்கள் தெரி வித்துள்ளனர்.