கோவை, ஆக.16- சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே, பொது சிவில் சட்டத்தை பாஜக அமலாக்க முயல்கிறது என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரி வித்தார். கோவை மக்கள் சிந்தனை மேடை நடத் தும் 9 ஆவது சிந்தனை அமர்வு “மக்கள் ஒற்று மையை சிதைக்கும் பொது சிவில் சட்டம்” என்ற தலைப்பில், காந்திபுரம் கமலம் துரை சாமி மண்டபத்தில் புதனன்று நடைபெற்றது. வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், துவக்க உரையாற்று கையில், ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் நடைமுறைகள் பின் பற்றப்படும். இச்சூழலில் பொது சிவில் சட் டம் வேண்டும் என கேட்பது எதார்த்த நிலைமையை உணராத தன்மையாகும். இச் சட்டம் ஏற்றத்தாழ்வுகளை ஈடு செய்யும் நடைமுறைக்கு பொருந்தாதது. குறிப் பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை பழி தீர்க்கப்படுவதற்காக பயன்படுத்தப்படு வதற்கு இந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு முன் னெடுக்கிறது, என்றார். அதனைத்தொடர்ந்து பொதுப்பள்ளிக் கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், ஒன் றிய அரசு சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குவதற்காகவே இந்த சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்குவதற்காக துடிக்கிறது. சட்டப்பிரிவுகளில் உள்ள கல்வி, வேலை வாய்ப்பு, குறைந்தபட்ச ஊதியம், பொது சுகாதாரம், ஆகியவற்றையெல்லாம் உறுதி செய்யாத அரசு, பொது சிவில் சட்டத்தை கையில் எடுப்பது உள்நோக்கம் உடையது. சுதந்திர தேசத்தில் பன்முகத் தன்மையோடு போராடி பெற்ற அதன் வலிமையை உணராத அரசு, இது நாள் வரை ஒரு பொதுத்துறையை கூட உருவாக்கவில்லை. ஆனால், கார்ப்ப ரேட்டுகளுக்கு வாரிக்கொடுப்பதில் வேக மாக செயல்படுகிறது. தேசத்தின் பெரும் பான்மை சமூக மக்களே இன்னும் உரிமை களுக்காக போராடி வருகிற நிலையில், சிறு பான்மை மக்கள் மீது அக்கறை கொண்டவர் களாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கபட நாடகம் நடத்துகிறது. இதனை மக்களி டத்தில் பரவலாக பேச வேண்டும், என் றார்.