districts

img

விற்பனை குறையும் பாரம்பரியப் பொருட்கள் கவலை முகம் காட்டும் வியாபாரிகள்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் பாரம்பரியப் பொருட்களான அம் மிக்கல், ஆட்டாங்கல் விற்பனை கணிச மாக குறைந்துள்ளது. இதனால், வாழ் வாதாரம் பாதித்துள்ளதாக வியாபாரி கள் கவலை தெரிவிக்கின்றனர். உண்ணும் உணவிற்கு சுவை கூட்டு வது உணவை செய்பவரின் கை பக்கு வம் என்பதை காட்டிலும் உணவை செய் யும் முறை என்பது தனி வகையானது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எலக்ட்ரானிக் பொருட்கள் பயன் பாடு பெரிதாக இல்லாத காலகட்டங்க ளில் வீட்டில் அறுசுவை உணவு சமைப் பது முதல் சாதாரண வகை குழம்பு வைப்பது வரை எல்லாமே கைமுறை சமையலாக இருந்தது.  தமிழர்களின் பாரம்பரியமான உணவு பட்டியலில் உணவை சுவை கூட்டுவதற்கான முக்கிய காரணிகளாக அம்மிக்கல் மற்றும் ஆட்டாங்கல் இருந் தது என்பார்கள்.. ஒவ்வொரு வீடுகளி லுமே கட்டாயம் வீட்டின் வெளியே ஓரமாக அம்மிக்கல், ஆட்டங்கல் நிச்சய மாக இடம்பெற்றிருக்கும். ஆனால் தற் போது காலநிலை மாற்றத்தில் அனைத் தும் தலைகீழாக மாறிவிட்ட நிலையில், அம்மிக்கல், ஆட்டாங்கல் இருக்கும் வீடுகளை பார்ப்பதே அரிதான ஒன் றாக மாறிவிட்டது. அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களிலும் இத்தகைய மாற் றங்கள் நிலவி உள்ள நிலையில், எலக்ட் ரானிக் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் சமையல் பயன் பாடு, அதன் வேலையை மிக இலகுவா னதாக மாறியுள்ளது.  அதேநேரத்தில், அம்மிக்கல், ஆட் டாங்கள் விற்பனை கணிசமாக குறைந் துள்ளதாக இத்தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்ற னர். பள்ளிபாளையம், சேலம் சாலை யில் சௌந்தர் என்பவர் சாலையோரம் அம்மிக்கல், ஆட்டங்கல் விற்பனை செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது கடந்த 20 வருடங்க ளுக்கு மேலாக இந்த தொழிலில் பணிபு ரிந்து வருகிறேன். வெளியிடங்களில் சென்று அம்மிக்கல், ஆட்டாங்கல்லை வாங்கி வராமல் சொந்தமாக கற்களை வாங்கி கணவன் மனைவியாகிய நாங் கள் இருவருமே சேர்ந்து புதிது புதிதாக அம்மிக்கல், ஆட்டாங்கல்களை அதிக ளவு தினந்தோறும் உற்பத்தி செய் கிறோம். ஆனால் நாங்கள் உற்பத்தி செய்வதை காட்டிலும் விற்பனை ஆவது மிக சொற்பமாக இருப்பதால் வாழ்வா தார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய காலகட்டங்களில் மிகப்பெரிய அளவி லான அம்மிக்கல், ஆட்டாங்கல் கூட்டு குடும்பமாக உள்ள வீடுகளில் அதிக அளவு இருக்கும். நீ தற்போது கூட்டுக்கு டும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங் கள் அதிகரித்துள்ள நிலையில் அம்மிக் கல் ஆட்டாங்கல் பயன்பாடும் வெகு வாக குறைந்து விட்டது.  தற்போது அம்மிக்கல், ஆட்டங்கல் லின் மகத்துவம் புரிந்தவர்கள், மிக இலகுவான முறையில் விலை குறைந்த அம்மிக்கல், ஆட்டாங்கல், மாவு அரைக் கும் கல் வேண்டும் என விரும்புகிறார் கள். அதற்கேற்றார் போல 170 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான அனைத்து வகையான அம்மிக்கல், ஆட் டாங்கல் மற்றும் சிறிய அளவிலான கல் பொருட்களை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். பல்வேறு பகுதிகளில் அதிகளவு இந்த தொழிலில் இருந்த தொழிலாளர் கள் தற்போது மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். மாற்று தொழிலை ஏதும் கற்றுக் கொள்ளாத நிலையில் நான் இன்னமும் வேறு வழியின்றி இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு அடுத்த தலைமுறைகளான எனது மகனும் மகளோ கட்டாயம் இந்த தொழிலை செய்வதற்கான எந்த வாய்ப் பும் இல்லை என்றார். நவீன தொழிற்நுட்பம் வீடுகளில் வேலையை எளிதாக்கி உள்ளது. இந்த தொழிற்நுட்பத்தை புறந்தள்ள முடி யாது. அதேநேரத்தில், இதுபோன்ற பாரம்பரியமாக கற்களை கொத்தி ஆட்டாங்கல், அம்மிக்கல் போன்ற வற்றை செய்யும் தொழிலாளர்கள், இத னைத்தவிர வேறு தொழில் தெரியாத நிலையில், நவீன தொழிற்நுட்பத்தின் வருகையால், வாழ்க்கையின் சறுக் கலை சந்திக்கின்றனர். இதுபோன்ற தொழிலாளர்களின் குடும்ப நிலையை ஆய்வு செய்து இவர்களுக்கான மாற்று தொழிலை செய்வதற்கான வழிகாட்டுத லும், உரிய பொருளாதார ஏற்பாடு செய்வது மட்டுமே தீர்வாக அமையும். -எம்.பிரபாகரன்