districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆணையர் கையெழுத்திட்டு மோசடி இளநிலை உதவியாளர் தலைமறைவு

கோவை, டிச.8- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நிலவரி உச்ச வரம்பு  உத்தரவு கடிதத்தில் உதவி ஆணையரின் கையெழுத்தை தனே இட்டு மோசடி செய்த, இளநிலை உதவியாளர் தலை மறைவாகியுள்ளார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டி டத்தில் நிலவரி உச்சவரம்பு உதவி ஆணையர் அலுவல கம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி  ஆணையராக இளவரசி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் இருந்த போது நிலவரி சம்பந்தமான உத்தரவு கடிதத்தில் அதே அலுவலகத்தில் இளநிலை உதவி யாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார்  என்பவர்  உதவி ஆணையர் இளவரசியின் கையெழுத்தை இட்டு கணபதி சார்பதிவாளர் அலுவல கத்திற்கு அனுப்பி வைத்தார்.  உதவி ஆணையர் இளவரசி விடுமுறையில் இருந்து வேலைக்கு வந்ததும் இந்த விவகாரம் அவருக்கு தெரி யவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உதவி  ஆணையர் இளவரசி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து இளநிலை உதவி யாளர் பணிக்கு வராமல் தலைறைவாகி விட்டார். அவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவி தற்கொலை

கோவை, டிச. 8- தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.  கோவை கணபதியை சேர்ந்த மாணவி ஒருவர், கண்ணம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ 2ம்  ஆண்டு படித்து வந்தார். மாணவி சரியாக படிக்கவில்லை என்று மாணவியின் தாயை கல்லூரிக்கு அழைத்து, ஆசிரி யர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற் பட்டு, விரக்தியடைந்த மாணவி வியாழனன்று வீட்டு குளி யலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது  குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம்

கோவை, டிச. 8- கோவை போத்தனூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம்  கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்தவர் ஹக்கீம்(32). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது தாய்,  தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்டனர். இதன் கார ணமாக ஹக்கீம் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த சில நாட்க ளாக வெளியே நடமாடவில்லை. அவரது உறவினர் ஜாபர்  சாதிக்(52) என்பவர் ஹக்கீமை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் அவர் பல முறை அழைத் தும் செல்போன் அழைப்பை ஹக்கீம் ஏற்கவில்லை. இத னால் சந்தேகமடைந்த அவர் ஹக்கீம் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே இது குறித்து  போத்தனூர் போலீசில் சாதிக் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை  உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஹக்கீம் அழு கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக் கும் மேல் இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர் எப்படி இறந்தார்? இறப்பிற்கான காரணம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

தந்தையை கத்தியால் குத்திய மகன்

கோவை, டிச. 8- தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் முற்றி தந்தையை கத்தியால் மகன் குத்திய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது  மகன் பூபாலன்(26). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புதனன்று இரவு பூபால னுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பூபாலன் தகாத வார்த்தைகளால் பேசி அவரது தந்தை ரமேஷை கத்தி யால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமேஷை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து, பூபாலனை கைது செய்து, சிறையில் அடைத்த னர்.

229 அரசு பேருந்துகள் புனரமைப்பு

கோவை, டிச.8-  கோவை கோட்டத்திற்கு உட்பட்ட மண்ட லங்களில் உள்ள அரசு பேருந்துகளில் 229 பேருந்துகள் புனரமைக்கப்படுவதாக தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறி வித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, உதகை, ஈரோடு மற்றும்  திருப்பூர் ஆகிய நான்கு மண்டலங்களுக்கு நடப்பு ஆண்டில் 229 பேருந்துகள் புனர மைக்கப்படுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புனரமைக் கப்படுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் முதற்கட்டமாக பணிகள்  முடிக்கப்பட்ட 4 பேருந்துகள் வெள்ளி யன்றும், மற்ற 5 பேருந்துகள் திங்க ளன்றும் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. மேலும் 36 பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பணி முடிக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை பொருட்கள் புழக்கம்: கண்காணிக்க தனிக்குழு

உதகை, டிச. 8- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களி டம், போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க  தனி குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும்  கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார்  பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர் கள் பங்கேற்ற கலந்தாய்வு  கூட்டம் வியாழ னன்று உதகையில் நடைபெற்றது. அதில், பள்ளி மாணவர்களிடம் புழக்கத்தில் உள்ள கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சுந்தரவடிவேல்  பேசுகையில், ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளதா என் கண்காணிக்க வேண் டும். ஒருவேளை அவர்களிடம் அந்த பழக் கம் இருந்தாலும் அவர்களை குற்றவாளி களை போல் நடத்தினால், எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு விடும்.  எனவே, இதற்கென பள்ளியில் தனிக் குழு அமைத்து விவாதித்து மாணவர்கள் பள்ளி வளாகத்தில் எப்படி நடந்து கொள்கி றார்கள் என்று பார்க்க வேண்டும். இந்த  தனிக்குழுவில் மாணவர்கள், ஆசிரியர்கள், போலீஸ் என முத்தரப்பும் இணைந்து செயல் படும். பள்ளியை சுற்றிலும் உள்ள கடைகள், பள்ளிக்கு வந்து செல்பவர்கள், பள்ளி அருகில் சம்பந்தமில்லாத நபர்களின் நட மாட்டம் உள்ளிட்டவற்றையும் கண்கா ணிக்க வேண்டும். குறிப்பாக பள்ளி ஆரம் பிப்பதற்கு முன்னும் பள்ளி முடிந்த பின்பும்  ஆசிரியர்கள் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஒருவேளை பள்ளிக்கு  அருகில் உள்ள கடைகளில் போதைப்பொ ருள் விற்பனை இருப்பது தெரியவந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக தனி வாட்சப் எண்ணும் உள்ளது.  தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக் கப்படும் என்றார்.  முன்னதாக, மாவட்ட சமூக நல அலு வலர் பிரவீணா தேவி, குழந்தைகள் நல அலு வலர் ஷோபனா, ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

பெருமாநல்லூரில் அரசு பேருந்து முற்றுகை

அவிநாசி, டிச.8- பெருமாநல்லூர் அருகே குறித்த நேரத்துக்கு வராத அரசுப்  பேருந்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட் டனர். திருப்பூரில் இருந்து மலையப்பாளையத்திற்கு இயக்கப் படும் அரசு பேருந்து 26 ஏ பெருமாநல்லூர் கொண்டத்து காளி யம்மன் கோயில் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தப்  பேருந்து குறித்த நேரத்துக்கு வருவதில்லை என பொதுமக் கள் தொடா்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலை யில், இந்தப் பேருந்துக்காக வியாழக்கிழமை காலையில்  மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் காத்திருந் தனர். ஆனால், காலை 8 மணிக்கு அப்பியாபாளையம் கிரா மத்துக்கு வர வேண்டிய அரசுப் பேருந்து ஒன்றரை மணி  நேரம் தாமதமாக 9.30 மணிக்குதான் வந்துள்ளது. இதில்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசுப் பேருந்தை முற்றுகை யிட்டு ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இனிமேல் குறித்த நேரத்துக்கு பேருந்து இயக் கப்படும் என்று நடத்துநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்ற னர்.

ரூ.24 லட்சத்தில் புதிய குடிநீர் குழாய்

தாராபுரம், டிச.8- தாராபுரம் நகராட்சி  தலைமை நீரூற்று நிலையத்தில் 15  ஆவது  மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில்  முடிக்கப்பட்ட குடிநீர் பணிகளை நகராட்சி தலைவர் கு.பாப்பு  கண்ணன் தொடங்கி வைத்தார். தாராபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தைபேட்டை, ஜின்னா மைதானம், உப்புத்துறை பாளையம் ஆகிய பகுதிக ளில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு செல்லும் குழாயில்  போதுமான அளவு தண்ணீர் விநியோகம் இல்லாமல் இருந்து  வந்தது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி  தலைவருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 15  ஆவது  மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில்  புதிதாக குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவ டைந்தது. அதன் மூலம் மேற்கொண்ட பகுதிகளுக்கு பொது மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் தங்குதடையின்றி சென்ற டைய  பிரதான குழாயை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண் ணன் திறந்து தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி  பொறியாளர் சண்முகவடிவு, நகராட்சி குடிநீர் மேற்பார்வை யாளர் பிரபாகரன், 19 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர்  புனிதா சக்திவேல், நகராட்சி குழாய் ஆய்வாளர் சுப்பிரமணி,  நகராட்சி அலுவர்கள், மற்றும் குடிநீர் பணியாளர்கள்  கலந்து  கொண்டனர்.

ரூ.48 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தாராபுரம், டிச.8- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி  விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் 161 விவ சாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர்,  திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8 ஆயிரத்து 6 க்கும்  குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 750 க்கும் சராசரி  விலையாக ரூ.7 ஆயிரத்து 300 க்கும் விலை போனது. மொத் தம் 1917 மூட்டைகள் 683 குவிண்டால் பருத்தி ரூ. 48 லட்சத்து  79 ஆயிரத்து 663 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 10  வணிகர்கள் பங்கேற்றனர்.

குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

தாராபுரம், டிச,8- தாராபுரம் தாலுக்கா இடையன் கிணறு கிராமத்தில் குடிநீர்  இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சிபிஎம் சார் பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலூக்கா செய லாளர் என்.கனகராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், குண்டடம்  ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சிகுட்பட்ட இடையன்கிணறு  கிராமத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு  வசிக்கும் மக்களுக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. பிற தேவைகளுக்கு ஆழ்துளை கிணறு  மூலம் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தற் போது ஆழ்துளை கிணற்றில் தண்ணீரும் இல்லை. இதனால்  மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து குண்ட டம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் இல்லாமல்  இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே  இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடையை சூறையாடிய காட்டுயானை வனத்துறையை கண்டித்து கடையடைப்பு

உதகை, டிச.8- பந்தலூர் அருகே காய்கறி கடையை ஒற்றை காட்டு யானை சூறையாடிய நிலையில், வனத்துறையை கண்டித்து சேரம்பாடியில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுயா னைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சுறுத்துவதுடன், ரேசன் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை உடைத்து சேதப்படுத்துவது, விளைநிலங்களில் புகுந்து விவசாய பயிர் களை சேதப்படுத்துவது மற்றும் மனித உயிர்களை பலி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று இரவு சேரம்பாடி பஜாரில் உள்ள காய்கறி கடை கதவை உடைத்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த காய்கறிகளை சூறையாடி வெளியே இழுத்து போட்டு, கால்க ளால் மிதுத்தும், தின்றும் சேதப்படுத்தியது. இந்நிலையில், காட்டுயானையை விரட்ட வலியுறுத்தியும், வனவிலங்குகளி டமிருந்து பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், வனத்து றையை கண்டித்து சேரம்பாடி பஜாரில் 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம் பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

7 ஆம் கட்டமாக நிவாரணப் பொருட்கள்

ஈரோடு, டிச.8- ஈரோடு மாவட்டத்திலிருந்து சென்னை பொதுமக்களுக்கு ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மிக்ஜம் புயலால் வரலாறு காணாத மழை பொழிந்து சென்னை மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இவர்க ளுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன்ஒருபகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சி யர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆறு மற் றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங் கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மில்கா பிரட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள், போர்வைகள், அரிசி, கோதுமை மாவு, ஆயில், பால் பவுடர், மெழுகுவர்த்தி, சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கள் ஐந்து கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டன. ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக 11 ஆயிரத்து 355 குடிநீர் பாட்டில் கள், 50 பிரட் பாக்கெட்கள், 2 ஆயிரத்து 812 பிஸ்கட் பாக்கெட் கள், 100 போர்வைகள், 100 நாப்கின், 100 லெகின்ஸ், மஞ்சள் தூள், சாம்பார் தூள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோபிசெட்டிபாளையம், டிச.8- கோபிசெட்டிபாளையத்தில் சர்வதேச கதிர் இயக்க தினத்தை முன்னிட்டு, தனியார் கல்லூரி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சர்வதேச கதிரியக்க தினம் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிச.8 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளை யத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாரா மருத்துவக்கல் லூரி சார்பில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. கல்லூரி முதல்வர் பியூலா ஒய்லட் தங்கம் தலைமை யில் நடைபெற்ற இப்பேரணியை, கோபிசெட்டிபாளையம் காவல் ஆய்வாளர் சண்முகவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் புகையிலை மற்றும் போதை பழக்கத் தினால் உருவாகும் புற்றுநோயினை முன்கூட்டியே கண்டறி யும் விதமாக ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைப்பு

தருமபுரி, டிச.8- ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ள தால், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5 கிராம ஊராட்சிகளில் வரும் டிச.11 முதல் 14 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத் தம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தருமபுரி கோட்ட நிர்வாகப் பொறி யாளர் க.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தருமபுரி திட்ட பராம ரிப்பு கோட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக்கு டிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட் டம், அரூர் ஒன்றியத்தில் உள்ள பெரியப்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, பைரநாய்க்கன் பட்டி, சிட்லிங் ஆகிய 5 ஊராட்சிகளுக்கு தின சரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தீர்த்த மலை அருகில் மாநில சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் களை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள் ளப்பட உள்ளது. எனவே, இப்பணிகள் மேற் கொள்ள ஏதுவாக இந்த 5 கிராம ஊராட்சிக ளில் வரும் டிச.11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய் யப்பட உள்ளது. இந்த நாள்களில் பொதுமக் கள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை பயன்ப டுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

போக்சோவில் முதியவர் கைது

சேலம், டிச.8- சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (52). இவர் அப்பகுதியில் விளை யாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப் போது அந்த குழந்தை சத்தமாக கூச்சலிட்டுள்ளது. அதனைக் கேட்டு பெற்றோர் வெளியே வந்து பார்க்கையில், குழந்தை யிடம் முதியவர் தவறாக நடந்து கொள்ள முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சண்முகத்தை பிடித்தனர். இதன் பின் அவரை செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். இதுகுறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகு றித்து விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சின்ன தங்கம், குழந்தையிடம் பாலியல் முயற் சியில் ஈடுபட்ட சண்முகத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தார்.

கால்வாயில் தேங்கும் குப்பைகள் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

உதகை, டிச.8- தேவாலா பகுதியிலுள்ள கால்வாயில் தேங்கும் குப்பை களால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நக ராட்சிக்குட்பட்ட 17ம் வார்டு தேவாலா பஜார் பகுதியில் உள்ள  ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி முன்புறம் முதல் தேவாலா பஜார் ஆட்டோ ஸ்டாண்ட் வரை உள்ள கழிவுநீர் செல்லும்  கால்வாயில் குப்பைகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் தேங்கி யுள்ளது. கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசு கின்றது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், வியா பாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளி லிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல் வேறு விதமான நோய் தொற்றுகள் பரவும் நிலை உள்ளது.  கழிவுநீர் கால்வாயில் தேங்கி இருக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

குறைதீர் முகாம்

ஈரோடு, டிச.8- ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனியன்று (இன்று) நடைபெற உள் ளது. சித்தோடு, பூவம்பாளை யம், வெள்ளிங்கிரிபுதூர், நஞ்சைகொளநல்லி, ஓலாலக் கோலல், ஒரிச்சேரி, பச்சாம் பாளையம், பூசாரிபாளையம் மற்றும் மல்லன்குழி ஆகிய கடைகளில் அனைத்து வட் டங்களுக்குமான குறைதீர் முகாம்கள் நடைபெற உள் ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.