districts

img

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம்

உதகை, மே 7- சங்பரிவாரங்களின் மதவெறி அரசியலை கண்டித்து கூடலூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெறும் தாக்குதல்களை கண்டித்தும், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் வகுப்புவாத வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கூடலூர் காந்தி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.  இதில், விசிக மாவட்ட செயலாளர் க சகாதேவன், நகர செயலாளர் துயில்மேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமது கனி, மாவட்ட துணை செயலாளர் குணசேகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுச்செயலாளர் அனிபா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.