கோவை, ஆக. 6- இந்தியா - ஜெர்மனி கூட்டு விமானப் போர் பயிற்சி ‘தாரங் சக்தி - 2024’ கோவையில் தொடங்கியது. இதில், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறை யாக கோவை மாவட்டம், சூலூர் விமானப்படைத்தளத்தில் கூட்டு போர் பயிற்சி செவ்வாயன்று தொடங்கியது. இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர் மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர் ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்தியா, ஜெர் மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள்ஆக. 14 ஆம் தேதியன்று வரை கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். போர் விமானத்தில் கோவையில் தரையிறங்கிய ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர் ஹார்ட்ஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதா வது, ‘இந்திய விமானப் படையுடன் இணைந்து முதல் முறை யாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்வதில் மகிழ்ச்சி யடைகிறோம். ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுவரை இது போன்ற கூட்டுப் போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தற்போது, இந் தியாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம். எதிர்வ ரும் நாட்களில் இந்த கூட்டுப் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடு பட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும் விமானப்படையில் தற்போது உள்ள அதி நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்’ என்றார். இந்த விமான போர்ப் பயிற்சியில் இந்தியாவின் அதிநவீன போர் விமானங்களான தேஜஸ், சு-30எம்கேஐ(Su-30MKI), மிஞ்29கே(Mig29K) மற்றும் பிற நாடுகளின் கனரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.