கோவை, ஜன.20- தியாகிகள் தினத்தை முன்னிட்டு, கோவையில் சிஐடியு, விச, விதொச சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடை பெற்றது. 1982ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று நடைபெற்ற முழு வேலை நிறுத்த போராட்டம் இடது சாரி கட்சிகள் சார்பில் நடைபெற்றது. இப்போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை, திருமெய் ஞானபுரத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றன. மறியல் போராட்டத்தை களைப்பதற்கு, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் பலியாகினர். இத்தியாகி களை நினைவு கூறும் வகையில், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சிஐடியு, விச, விதொச சார்பில் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படு கிறது. அதன்படி, கோவை மாவட் டத்தில் சிஐடியு சார்பில் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சிஐடியு ஆர்எஸ்புரம், காமராஜபுரம் பகுதிகளில் தியாகி கள் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு, சிஐடியு இரவு நேர பாது காவலர்கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் என்.செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொரு ளாளர் ஆர்.வேலுச்சாமி, சுமைப்பணி தொழிலாளர் சங்க ஆர்.ராஐன், ஆட்டோ சங்க எம்.சி.முத்துக்குமார், ஏபிடி எஸ்.ஆறுமுகம் மற்றும் விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, துணைச் செய லாளர் ரவீந்திரன், விவசாய தொழிலா ளர்கள் சங்க நிர்வாகிகள் துரைசாமி, செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.